Saturday, August 21, 2010

தமிழ் மக்கள் அனைவரும் சீக்கியராக மாறுவோம்

தமிழ் மக்கள் அனைவரும் சீக்கியராக மாறுவோம்
ஆம் , அப்போதாவது தமிழர்களை மனிதர்களாகவாது பார்க்கிறார்களா என்று பார்ப்போம்,
மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது மதம் மாற வேண்டும் என்று வெறும் துண்டு பிரசுரம் மட்டுமே எவரோ பரப்பி உள்ளனர் காசுமீரில், உடனே உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் காசுமீர் சென்று முதல்வருடன் கலந்தாலோசிக்கிறார் , நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்படுகின்றன , நிதி அமைச்சர் , உள்துறை அமைச்சர் , பிரதமர் அனைவரும் பாதுகாப்பு உறுதி அளிக்கின்றனர் ,,, இருந்தும் கூட பஞ்சாப் முதல்வர் கடும் எச்சிரிக்கை விடுக்கிறார் ...
ஆம் பஞ்சாபில் அல்ல , காசுமீரில் தன் இன மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு ஏற்க்காவிட்டால் , கடும் விளைவுகள் நேரிடும் என்று பஞ்சாப் முதல்வர் அறிவிக்கிறார் ,
காசுமீர் பிரிவினை வாத தலைவர்களும் , இல்லையில்லை , இது உளவுத்துறையின் சதிவேலைதான் , நாம் எப்போதும் சிறுபான்மையினரை காப்போம் என்று அறிவிக்கிறார்கள் ...

அனால் தமிழ் மீனவர்கள் தினந்தோறும் தாக்கப்படுவதோடு நில்லாமல் நுற்றுக்கனக்கானோர் கொல்லப்பட்டும் கூட ... உள்துறை அமைச்சர் தமிழக முதல்வரை சந்தித்தபின் கூறுகிறார் , "இந்த ஆண்டு இந்த ஒரு நிகழ்வு தான் நடந்துள்ளது"....இன்னும் எதனை நிகழ போகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று ,,,,,

உலக மகா அதி புத்திசாலி வெளியுறவு அமைச்சர் கிருசன பரமாத்மா கூறுகிறார் , எல்லை தாண்டி சென்றால் நாம் காப்பாற்ற முடியாது என்று .... என்றைகாவது இவர் கட்டு மரம் ஏறி பயணித்தது உண்டா ... எல்லை எங்கிருக்கு என்று கண்டறிய .....

இதுவே தமிழரின் நிலை ... ஆகவே தமிழர் அல்லாமல் வேறு எந்த இனமாக வேண்டுமானாலும் நாம் மாறினால் நமக்கு பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் ... ஆகவே மக்களே, நீங்களே உங்கள் விருப்பபடி ஒரு இனத்தை தேர்வு செய்து உடனடியாக உங்கள் உயிர் உடமையை பாதுகாத்து கொள்ளுங்கள் ....



No comments:

Post a Comment