Wednesday, July 22, 2009

நான் சற்று அவசரப்பட்டு

ஆங் சான் சூகிக்கு மகாத்மா காந்தி சர்வதேச விருது

இந்த தலைப்பை படித்தவுடன் நான் சற்று அவசரப்பட்டு இந்த விருதை மத்திய அரசுதான் வழங்குகிறதோ என்று எண்ணி விட்டேன்,

முழுமையாக கட்டுரையை படித்த பின்புதான், விருதை வழங்குவது தென் ஆப்பிரிக்காவின் அறக்கட்டளை என்று புரிந்தது,

ஆனாலும் எனக்கு இதில் பெரும் வியப்பு ஏற்படவில்லை, மத்திய அரசு இதே போன்று மேலும் ஒரு விருதை அறிவித்தாலும் வியப்பில்லை,

ஏனென்றால் முடிந்தவரை, போதும் போதும், வேண்டாம் வேண்டாம் என்று கூறும் அளவுக்கு மியான்மார் இராணுவத்துக்கு அணைத்து விதமான உதவிகளையும் செய்து, மறுபுறம் அமைதி விருதையும் வழங்கலாம்,

ஏனென்றால் வல்லரசை நோக்கி நகரும் நாடல்லவா, வல்லரசுகள் செய்யும் நாகரிக நயவஞ்சகம் இது தானே,

பிராந்திய அரசியல் முக்கியத்துவம், வல்லமை, பாதுகாப்பு, இப்படி பல,
தனி மனிதனக்கு எந்த விதத்திலும் பயன்படாத வார்த்தைகள் தான்,
மக்களாட்சியின் அற்புத பயன்பாடுகள்,

மக்களுக்கு என்றுமே நன்மை பயக்காத அற்புத சொற்களஞ்சியம்,

மக்கள் இதை உணரும்வரை ஆட்சியாளர்களின் சொர்க்க களம்.....

ஏதோ முடிந்த வரை நானும் சொற்களை சொல்லி உள்ளேன்!!!!!

வாழ்க மக்களாட்சி.... வாழ்க ஆட்சியாளர்கள்....

Tuesday, May 12, 2009

கொலை செய்வது எப்படி?

கொலை செய்வது எப்படி? இதை படியுங்கள்....

மிகவும் எளிமையான வரைமுறை இது,

கத்தி, துப்பாக்கி, எந்த விதமான ஆயுதமும் தேவையில்லை,

இரத்தமும் இல்லை, வலியும் இல்லை,

கொலைக்கு நிகரான ஓர் நிகழ்வை காண விரும்பும் தமிழக, புதுவை மக்களே,

நாளை மறுநாள் மே 13 அன்று,

கொடுரப் படுகொலையை முன்னின்று அரங்கேற்றும்;

கை கழுவ வேண்டிய கையாலாகாத கைக்கட்சிக்கு,
வாகளிப்பவர்கள் அனைவருமே கொலைக்கு உடந்தையானவர்களே,

ஆகவே கொலை செய்யும் அனுபவம் வேண்டுவோர்கள் கைக்கட்சியுடன் கைக்கோர்க்கலாம்,

அல்லது

வாக்களிக்காதவர்கள்,

கொலை செய்தவர்களிடம் வினவி, விளங்கிக் கொள்ள(ல்ல)லாம்....

Monday, May 4, 2009

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

ஈழ மண்ணில் மீண்டும் ஒரு போர்... உடைமைகளை இழந்து, வீடிழந்து, உயிரையும் இழந்து மானுடம் காணக்கூடாத இன்னலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழரின் துயர நிலை கண்டு மனம் வெதும்பும் புலம்பெயர் ஈழத்தமிழர் போலவே புதுவையிலிருந்து நானும் உங்கள் துயரை பகிர்ந்து கொள்கிறேன்... என்னைப் போலவே இன்னும் பலரும் இதை மட்டுமே செய்ய முடியும் என்பது மறுக்க முடியாத ஏற்றுக்கொள்ளவேண்டிய எதார்த்த நிலை...

எனினும் இந்த தருணத்தில், தமிழகத்தில், வழக்கம் போல் எழுந்துள்ள தேர்தல் களியாட்டமும், இந்த ஏமாற்று களியாட்டத்துக்கு இந்த முறை, ஈழம், பிரதான கருவியாக பயன்படுத்தபடுவது பற்றியும், இந்த சூசக களியாட்டத்துக்கு தெரிந்தும் தெரியாமலும் ஆதரவு அளிக்கும் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கு விடுக்கும் வேண்டுகோளாக இந்த பதிவை நான் இங்கு விவரிக்கிறேன்....

தமிழனுக்கு எதிரி தமிழனே!!

தமிழனுக்கு எதிரி வேற்று கிரகத்திலிருந்தோ, வேற்று நாட்டிலிருந்தோ, வேற்று மாநிலத்தலிருந்தோ வர வேண்டிய அவசியமே இல்லை, அவனுடனேயே இருக்கும் வஞ்சகன் தான் என்று பலரும் உணர்ந்து கூறியுள்ளதை நான் முன்னரே எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன், ஈழத்தமிழர்கள் நீங்களும் எங்களை விட அதிகமாக உணர்ந்துள்ளீர்கள்... எனினும் மீண்டும் அதே தவறை இன்றைய நிலையில் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்....

தமிழக அரசியலையும், குறிப்பாக சொல்வதென்றால் சமீப காலமாக பெருமளவு மாற்றம் கண்டுள்ள இந்திய அரசியலையும் உங்களில் பலர் அறிந்திருக்கலாம், அறியாமலும் இருக்கலாம், அந்த பெருமளவு மாற்றம் என்பது வேறொன்றுமல்ல, சமூக பற்றற்ற, நாட்டுப்பற்றற்ற, கொள்கை என்றால் என்ன, அது என்ன விலை, எங்கே கிடைக்கும், என்ற கீழ்த்தரமான மாற்றம் தான்,

வெற்றி பெற, பதவி பெற, ஆட்சி பிடிக்க மக்களின் தொண்டையை கூட பிடித்து முருக்க தயங்காத பீடர்களின் பளிங்கு தோட்டமாக உருமாறியிருப்பது தான் இன்றைய தமிழக தேர்தல் களம். ஆக இந்த களத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், முழக்கமிடுவார்கள், இந்த நச்சுக் கடலில் நீங்களும் விழுந்து, ஏற்கனவே பிளவு பட்டிறிக்கும் தமிழ் சமூகத்தை மேலும் சிதறடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்...

நான் இங்கு எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ விமர்சிக்க முயலவில்லை, இருந்தாலும் சில நாட்களாக புலம்பெயர் ஈழத்தமிழர்களும் ஏனைய நாட்டின் தமிழ் அமைப்பினரும் பெருவாரியாக அறிவிக்கும் நன்றி மடல்களும், எதிர்மறை பிராச்சாரங்களும் தமிழர்களின் நோக்கத்திலிருந்து பாதை தவருவதாகாவே உள்ளன,

தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரின் திடீர் மனமாற்றமும், தேர்தல் வாக்குறுதிகளும், அதனை தொடரும் புலம் பெயர் தமிழர்களின் நன்றி மடல்களும் சற்று வியப்பை அளிக்கத்தான் செய்கிறது, தேர்தல் நேர வாக்குருதிகலாகவாவது அம்மையாருக்கு திடீர் ஞானோதயம் வந்ததே, அதுவரை மகிழ்ச்சியே, இந்த நிலையிலாவது அம்மையார் நிலை மாறியுள்ளார் என்று ஈழத் தமிழர்கள் நீங்கள் நம்புவீர்களேயானால், நாம் அதை தடுக்க விரும்பவில்லை, நீங்கள் நன்றி பாராட்டுவதை குறையென்றும் சொல்லவில்லை, காலம் வழிசெய்தால், தமிழரின் நோக்கம் தமிழீழம் அமைந்தால் யார் என்ன சொன்னால் என்ன...

எனினும் அதற்குமுன் நான் அறிந்த சில செய்திகளை உங்களுடன் இதோ பகிர்ந்து கொள்கிறேன் (எல்லாம் தெரிந்த செய்தி தான்) ,

ஏன் இந்த திடீர் மாற்றம்,

போர்முனையில் மடியும் தமிழனின் ஓலம் கேட்க இத்தனை காலமா?

"அங்கே இருந்தால் புதைமணலில் தான் போவீர்கள், இங்கே எங்களுடன் கூட்டு சேர்ந்தால் ஒளிமயமான எதிர்காலம்" என்று கைக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தபோது தெரியவில்லையா ஈழ நிலை?

'போரென்றால் மக்கள் மடிவது இயல்பு தான்' என்று சொற்பொழிவு நடத்தியபோது தெரியவில்லையா ஈழ நிலை?

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஈழத்துக்காக ஓயாமல் குரல் கொடுக்கும் வைகோவுக்கு ஏற்பட்ட நிலை, அம்மையாரின் அரசியல் பேராசையால், வைகோ எந்த நிலை வரை சென்று, நிர்பந்தத்தால் இன்றைய நிலையில் நீடிப்பதும், சமீபத்தில் ஒரே மேடையில் அவருக்கு அம்மையாரால் அளிக்கப்பட்ட (அவ) மரியாதையையும் ஊடகங்களில் நீங்கள் படித்திருப்பீர்களேயானால் புரியும் அம்மையாரின் ஈழ பாசம்!!

இன்னும் சொல்வதென்றால் தேர்தல் முடிவுக்குப்பின் ஏற்படும் அதிர்ச்சிக்கு நீங்கள் உங்களை திடப்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்...

ஆக இருக்கும் எந்த கட்சியும் யோக்கியர்கள் என்றோ, வஞ்சகர்கள் என்றோ நான் கூற விழையவில்லை... இதே ஆளும் கட்சிக்கு தமிழக சட்ட மன்றத்தில் அருதி தனிப்பெரும்பான்மை இருந்திருக்குமேயானால், அந்த கட்சியின் இன்றைய நிலை வேறுபட்டிருக்கும் என்பது எதார்த்தம், அனைவரும் அறிந்தது...

ஆக இருக்கும் அனைவரும் தம் கொள்கைகளை மாற்றி அமைத்துக்கொள்வது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதற்கும், ஆட்சியை கைப்பற்றுவதற்கும் தான்... ஆனால் ஆளும் கட்சியின் அதிகார மட்டத்தில் தான் இந்த எண்ணம் இருக்கிறது என்பதை புலம் பெயர் ஈழத்தமிழர்கள் உணர வேண்டும், உள்ளூர் அரசியல் அறியும் பொது மக்களும், ஏனைய கட்சியின் ஆதரவாளர்களும், தொண்டர்களும் எப்போதும் ஈழ ஆதரவாளர்கள் தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,

நான் முன்னரே குறிப்பிட்டது போல, நீங்கள் ஈழ ஆதரவு தலைவர்களுக்கு நன்றி பாராட்டுவது பிழையல்ல, ஆனால் சிலரை போற்றுவதும், சிலரை தூற்றுவதும் இருக்கும் பிரிவினையை மேலும் அதிகரிக்கும் என்பது எனது கருத்து, அது தமிழரின் நோக்கத்தை திசை திருப்பும் செயலாகவே அமையும்....

ஈழ போராளிகள் களத்தில் போராடுகிறார்கள், அவர்கள் தமிழக அரசியலை விமர்சிப்பதில்லை,

நாமும் இந்த அரசியல் களத்தை ஒதுக்கிவிட்டு, எப்போதும் போல் நோக்கம் சிதையாமால், வழி பிறழாமல், தம்மால் இயன்ற பங்களிப்பை அளித்து இறுதி இலக்கிற்கு வலிமை சேர்ப்போம்.....

Friday, April 24, 2009

வன்னித்தமிழனை கொன்றொழிக்கும் தமிழனின் 40......

வன்னித்தமிழனை கொன்றொழிக்கும் தமிழனின் 40......

ஆம் 2004ல் தமிழகத்தில் சுளையாக அள்ளிய 40 தொகுதிகள் தான், மத்தியில் ஆட்சியமைக்க காரணமாக இருந்த எண்ணிக்கை வித்தியாசம், பாஜக'வுக்கும், கைகூட்டத்துக்கும்.....

தமிழன் அன்று 40க்கு 40 கொடுத்த போதே, ஆரம்பமாகியுள்ளது திட்டம்... அதன் முடிவு தான் இன்றைய வன்னி நிலை... என்ன சாதூர்யம் பார்த்தீர்களா....

ஏணியை எட்டி உதைப்பதெல்லாம் பழைய கதை... ஏணி இருந்த இடம் தெரியாமல் செய்வதே இன்றைய நிலை.....

இந்த 5 வருஷமா என்ன என்னவெல்லாம் கொடுத்துள்ளது இந்த கைகூட்ட மத்திய அரசு.... ஆயுதம், முப்படை பயிற்சி, இவையெல்லாம் போதாதென்று வட்டியில்லா கோடிகளில் பணம், (பல ஊடகங்களில் இதன் விளக்கம் வந்திருந்தாலும் சமீபத்திய குறிப்பு இதோ .... இறுதியில் இணைக்க பட்டுள்ளது)

அடப்படுபாவிகளா, இதையெல்லாம் இங்கே செய்திருந்தால், மும்பை 26/11, அஸ்ஸாம் குண்டுவெடிப்பு ... இன்னும் பல எண்ணிக்கையில் அடங்கா நிகழ்வுகளை தடுத்திருக்கலாமே... போயும் போயும் உங்க வெத்து வீரத்த ஏண்டா தமிழங்கிட்ட காட்றிங்க... அப்பொறம் எங்கிருந்து இறையாண்மை, தேசம், வெங்காயம்.... இதெல்லாம் பேசறது....

பக்கத்துக்கு மாநிலத்ள எப்போதும் போல தண்ணில'தான் பிரச்சினை... அத தான் தேசம், ஒற்றுமை சொல்லி விவசாயிகள கொல்றிங்க.... எங்க 40 தொகுதியையும் வாங்கி எங்க ஆளுங்களையே கொல்ரிங்களே, அப்பறோம் ஏன்டா தமிழ் தேசியம் பேச மாட்டாங்க.....

இவ்வளவு நடந்த பின்னும் வரும் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் கைக்கூட்டம் வெற்றி பெறுகிறதோ.... அந்த தொகுதியில் கைகூட்டத்துக்கு வாக்களித்தவர்களுக்கு கோயில் தான் கட்ட வேண்டும்......

நான் எந்த கோயில்'ன சொல்றேன்னா ........

http://www.thestatesman.net/page.arcview.php?clid=2&id=284403&usrsess=1

Wednesday, April 22, 2009

பகடைக்காயாகும் புதுவை....

பகடைக்காயாகும் புதுவை....

மளிகை கடைகளிலும், சந்தையிலும், வியாபாரம் முடிவு செய்யப்பட்டு, கடைசியாக கொடுக்கப்படும் கொசுறு போல் ஆகிவிட்டது புதுவை மக்களவை தொகுதியின் நிலை,

தமிழகத்தில் பெயரளவில் இருந்தும், இல்லாமல் இருக்கும் கைக்கூட்டம், புதுவையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு, திராவிடக்கட்சிகளின் இந்த கொசுறு கலாசாரம் தான் பிரதான காரணம்,

ஒவ்வொரு தேர்தலிலும் கைக்கூட்டமும், 2001ல் புதுவையில் ஆட்சியை புடிப்போம் என்று கோழி பிடிப்பது போல் கூவிய தன்னிகரில்லா தன்மான கொள்கைமான், அன்புச்சகோதரியின் அண்ணன் மருத்துவரும், மாறி மாறி புதுவையை என்னவோ தங்களுக்கு எழுதி கொடுக்கப்பட்டுவிட்ட தொகுதி போல் பாவிப்பதற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகள் புதுவை தொகுதியை வெறும் எண்ணிக்கை கண்ணோட்டத்துடனேயே காண்பதே ஆகும்,

புதுவையில் கைக்கூட்டதுக்கு நிகராக உள்ள திமுக, தமிழக தலைமை எது சொன்னாலும், அப்படியே ஆமாம் போடுவதோடு நில்லாமல், அறிவுடைநம்பி கொள்கைமான் மருத்துவர் கட்சியை எப்படியாவது இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று, இனத்துரோகி, கைக்கூட்டதுடன் கைக்கோர்த்து களத்தில் குதித்துள்ளது.

ஆக இருக்கும் பிரதான இரண்டு அணிகளும் இன வஞ்சக அணிதான், புதுவை மக்களுக்கு இப்படி ஒரு நிலை வரவேண்டுமா?

தமிழக தலைமை என்ன முடிவு எடுத்தாலும் ஆமாம் போடும் புதுவை திமுக'வினர், பெயரளவிலாவது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அல்லது மக்களுடைய கருத்துக்களை தமிழக தலைமைக்கு தெரிவிக்கிறார்களா எனபது தெரியவில்லை,

சமீபத்தில் நான் படித்த ஒரு இணையதளச் செய்தி துணுக்கில்,
“தமிழக தலைமை அலுவலக’பவனக்கு பெனாயில் வாங்க கூட தேசிய தலைமையிடம் அனுமதி கோரும் கைக்கூட்டம்”... என்ற விமர்சனம்....

மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தலைமை என்ன சொன்னாலும் கேட்கும் பட்சத்தில் புதுவை திமுக'வுக்கும் இந்த நிலை தான் ஏற்படும்,

தமிழகத்தில் ஆட்சி நிர்பந்தம் காரணமாகத்தான் புதுவையில் கைக்கூட்டம் ஆட்சியில் நீடிப்பதற்கு காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை,

இந்த நிலையிருக்க, புதுவை எங்கள் கோட்டை, பருத்திக்கொட்டை! என்று பீற்றிக்கொள்ளும் கைக்கூட்டத்தை, தமிழகத்தில் ஒடுக்கி அடக்கியதை போல், புதுவையிலும் செய்ய, புதுவை மாநில திமுக தீர்க்கமான உரிமைகளை தலைமையிடம் பெற முடியாதவரை கைக்கூட்டத்தின் கை ஓங்கியே இருக்கும் எனபது தான் நிதர்சனம்.....

அல்லது இந்த இன வஞ்சக சூழலை தக்கவாறு பயன்படுத்தி, இரு பிரதான அணியை தோல்வியுற செய்ய முடியாவிட்டால் கூட, தக்கதொரு பாடம் புகட்ட மாற்று அணியினர் தங்கள் யூகங்களை தக்கவாறு ஒருநிலை படுத்த வேண்டும்,

மக்களே, புதுவை மக்களே, எல்லாம் உங்கள் முடிவில், என்ன செய்யப் போகிறீர்கள்!!

Wednesday, April 8, 2009

ஷூ வீச்சு - தமிழக/புதுவை மக்களுக்கு மேலும் ஒரு படிப்பினை…

ஷூ வீச்சு - தமிழக/புதுவை மக்களுக்கு மேலும் ஒரு படிப்பினை…

தமிழக/புதுவை மக்களே, நண்பர்களே, பார்த்தீர்களா, கேட்டீர்களா, இன்றைய முக்கியச் செய்தியை,

“உள்துறை அமைச்சர் மீது ஷூ(காலணி) வீச்சு!!!!

”இதையும் தினமும் வந்து போகும் ‘முக்கியச் செய்தி’ போல் சற்று நேரம் பார்த்து, மேலும் சிலர் இன்னும் சற்று நேரம் விவாதித்து, பின்னர் மறந்து விடாமல் இந்த நிகழ்வு பற்றியும், அது எவ்வாறு தமிழர்களுக்கும் பொருந்துகிறது என்பதையும் சற்று எண்ணிப் பார்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன்,

ஆனால் அதற்காக காலணி வீசியதை நான் இங்கே நியாயப்படுத்த விரும்பவில்லை, எனினும் இன்றைய விளம்பரப் பேராசைப் பிடித்த பத்திரிகை மற்றும் ஊடக கூட்டம், எழுத்து சுதந்திரம், எப்படிப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்குகின்றன என்பதற்கு இந்த காலணி வீச்சு, பல உதாரணங்களில் ஒன்று….

அந்த வகையில் இந்த நிகழ்வு பத்திரிகை ஊடாகவே, கொடுரத்தின் வீரியத்திற்கேற்ப, பிரபலப்பட்டு, விளம்பரப்பட்டு விட்டது, இது இன்னும் தொடரும்….

காலணி வீசிய அந்த சீக்கிய பத்திரிகையாளர், அவர் கொண்டு வர நினைத்த எழுச்சியை இந்நேரம் அவரது சமூகம் கொண்டிருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது, அவர் தனது மனக் குமுறுளை ஒரு முழு எழுச்சியாக மாற்றி வெற்றி கொண்டுள்ளார்….

அதை எப்படி அடைந்தார் எனபது எப்போதும் போல் மறந்து, மறைத்து, மறக்கப்படும்…

அதுவும் அரசியல்வாதிக்கு எதிராகத்தானே இந்த நிகழ்வு நடந்திருக்கிறது, ஆகவே அவர்களும் இதை எளிதாக மறந்து விடுவார்கள்….

அனால் தமிழர்கள், தமிழகத்திலே, புதுவையிலே வாழும் நாம் என்ன செய்யப் போகிறோம், நான் முன்னரே கூறியது போல், காலணி வீச்சை இங்கு நியாயப்படுத்தப் போவதில்லை,

நாமும், ஒரு இனம் படுகொலை செய்து அழித்தொழிக்கப்பட்டபின் நமது ஆதங்கத்தை, குமுறுளை வெளிப்படுத்த போகிறோமா?

அல்லது இந்த இன அழிப்பை தோள் கொடுத்து, உடனிருந்து, “ஐலசா” போட்டு ஆனந்தமாய் ஆர்ப்பரிக்கும் தேசிய கட்சியை இன்னமும் நம் தமிழ் நிலத்தில் நீடிக்க அனுமதிக்க போகிறோமா….

நண்பர்களே, இனி நடக்க போகும் நிகழ்வை சற்று உன்னிப்பாக கவனியுங்கள்… காலணி வீசிய பத்திரிகையாளர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தமிழர்கள் நாம் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்…

தேர்தல் காலம் எனபது ஒரு பக்கம் இருந்தாலும்… நான் கவனிக்க போவது சீக்கியரான பிரதமர் எடுக்க போகும் நிலை… ஏனெனில் இது அவரது இனம் சம்மந்தப்பட்ட நிகழ்வு…

அரசியலாக இருந்தால் அவரால் எதுவும் செய்ய முடியாது!! அது நாடறிந்த உண்மை…. அந்த துறை இத்தாலி அன்னையுடையது!!!

சிலருக்கு தெரியாமல் இருக்கலாம், இப்போது நான் சொல்லப்போகும் செய்தி…

சீக்கிய படுகொலை வழக்கில் சமீபத்தில் CBI தனது விசாரணை அறிக்கையில், கொடுரக் கலவரத்துக்கு காரணமான சம்மந்தப்பட்ட தேசிய கட்சியின் பிரமுகரை விடுவித்தாலும் … அதே தேசிய கட்சியின் அரசை தலைமை மட்டுமே தாங்கும் நமது பிரதமர் எடுத்திரிக்கும் நடவடிக்கை …

அந்த தீர்க்கமான முடிவில் தான் அவர் பாராட்டை பெறுகிறார்….

தனது கட்சிக்கு எதிரான நடவடிக்கை என்றாலும் கூட, தனது இனத்துக்காக செயல்படுகிறார், இழைக்கப்பட்ட கொடுரத்துக்கு குரல் கொடுக்கிறார்… அந்த நடவடிக்கை என்ன? ஆங்கில கட்டுரையில் தான் அதை படித்தேன்.. முடிந்த வரை மொழிமாற்றம் செய்துள்ளேன்… (ஆங்கில கட்டுரையின் இணைப்பு இந்த கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது)

CBI, கலவரத்துக்கு காரணமான அந்த தேசிய கட்சியின் பிரமுகரை விடுவித்தாலும், அந்த தீர்ப்பை நடைமுற படுத்த தனி ஆணையம் ஒன்று உள்ளது, ஆனால் தற்பொழுது அந்த ஆணையம் CBIக்கு உட்பட்டே செயல்படுகிறது… ஆகவே CBI வழங்கிய தீர்ப்பை அது அப்படியே "ஆமாம்" போடும்.. என்பதை பிரதமரும் உணர்ந்துள்ளார்..

ஆகவே அவர் தற்பொழுதுள்ள ஆணையம் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த விடாமல்,… தனி நீதிபதிகளை கொண்ட CBI சார்பற்ற மாற்று ஆணையத்தை, இந்த தீர்ப்பிர்க்கு மட்டும் நியமனம் செய்துள்ளார்…

தமிழக/புதுவை மக்களே, பார்த்தீர்களா… இது இனப்பற்றா… அல்லது நம்மிடேயும் உள்ளனரே, தமிழனக்கு இறையாண்மை போதிக்கும் தேசிய கட்சியின் ஆண்மாக்கள், இவர்கள் இன பற்றாளர்களா…..

பிரதமரே, தன் இனத்துக்காக, தானே தலைமை தாங்கும் அரசுக்கு எதிராக தனி ஆணையம் அமைத்திருந்தாலம், உண்மையான அரசியல் அதிகார மையமான இத்தாலி அன்னையும், அவருடைய அறிவார்ந்த அரசியல் சானக்கியர்களும், சீக்கியர்களுக்கு நியாயம் கிடைக்க அனுமதிப்பார்களா என்பதை நாம் பொருத்திருந்து பார்த்தாலும், அது என்றுமே நடக்காது என்பது தான், நாமறியும், நாடறியும் உண்மையான பேருண்மை…..

எனினும் இந்த நிலையில் மேலும் ஒரு நிதர்சன உண்மையை கவனிக்க வேண்டும்…

மக்கள் காலப்பொழுதில், பல நேரங்களில் வெகுவிரைவில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறந்து விடுகிறார்கள் எனபது தான்; அதன் விளைவு தான் நாம் இன்று காணும் அரசியல் அரங்கம்…

இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் எனில்…

அப்படிப்பட்ட கொடுர சீக்கிய கலவரத்துக்கு பின்னரும் கூட, சீக்கிய மக்கள் இந்த தேசிய கட்சியை தமது மாநிலத்தில் நிலைக்க அனுமத்திப்பதோடு நில்லாமால், ஆட்சி மேடையிலேயே அமர்த்தி அழகு பார்த்தனர் என்பது தான் மறுக்க முடியாத, கண்களை மூடிக்கொண்டு ஏற்று கொள்ள வேண்டிய அப்பட்டமான உண்மை… இதை சாதிக்க முடிந்ததால் தான் தேசிய கட்சியின் அரசியல் சாதூர்யம் இன்னமும் நிலைக்க முடிகிறது,

மக்களின் மிகக்குறுகிய நினைவாற்றளால், தலை மேல் ஏறி மிதிக்க முடிகிறது….

ஆம், தமிழக/புதுவை மக்களே, நாமும் இதையே தான் செய்து கொண்டிருக்கிறோம்… என்ன படுகொலை மட்டுமே இன்னும்
நடக்கவில்லை…. அது நடைபெறுவது அருகில் உள்ள தமிழ் ஈழ தீவில்….

அரசியல் ரீதியாக 40 ஆண்டுகளாக தேசிய கட்சியை தமிழகத்தில் ஆட்சியிலிருந்து விலக்கினாலும், இன்னமும் நாம் அவர்களை முழுமையாக தனிமைப்டுத்தி அகற்ற முடியவில்லை, இன்னமும் அவர்கள் இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களாகவே உள்ளனர்…. புதுவையில் சொல்ல வேண்டியதில்லை, கூட்டணிக கொடுமையால் அங்கு, திமுக தலைமையின் நிர்பந்தத்தால், தேசிய கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது….

தமிழக/புதுவை மக்களே, காத்திருக்க போகிறோமா?

படுகொலையை நாமும் உணரும் வரை…..

இறுதியாக… ஒரு உறுதியான, உண்மையான இனப்பற்றாளன், சமூகப் பற்றாளன் கூறிய வார்த்தைகளோடு, இந்த கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்…

இது எப்பொழுது கூறப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் அந்த சூழல் நாம் உணரும்படி உள்ளது….

சீக்கியரான உங்களை, தேசிய கட்சி, நாட்டின் உயரிய பதவியில், பிரதமர் ஆக்கியுள்ளதால் , சீக்கியர்கள் கடந்த கால நிகழ்வுகளை மன்னித்து விட்டார்களா? என்று பிரதமரை பத்திரிகை நிருபர் கேட்டதற்கு,

"சீக்கியர்கள், கொடுரப் படுகொலையை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்" என்று ஒரு உண்மையான இனப்பற்றை வெளிப்படுத்தினார், இன்றைய பிரதமர்…

பார்ப்பதற்கு தான் சற்று மெலிந்தவராக, அமைதியாக இருந்தாலும், ஒரு உண்மையான இனபற்றாளனின் குமுறல், ஒரு இனத்தின் வேதனை, வலி அந்த வார்த்தைகளில் உணர முடிகிறது,

வீரம் செழிந்த சீக்கியனின் சீற்றம் அது…


சீக்கியனும் இந்தியன் தான், தமிழனும் இந்தியன் தான், அவனது உரிமைகள் பறிக்கப்படாதவரை, எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்வரை…… அவனது உணர்வுகள் மதிக்கப்படும்வரை….

07-April-2009; இந்த நாள் சீக்கியர்கள் மட்டும் நினைவு கொள்ள வேண்டிய நாளல்ல,

தன் இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுரத்தையும், அநீதியையும், கண்டு குமுறும் ஒவ்வொரு இனப்பற்றாளனும் நினைவிற் கொள்ள வேண்டிய நாள்… அந்த வகையில் இது தமிழனக்கும் பொருந்தும்.....

http://news.in.msn.com/National/article.aspx?cp-documentid=2465748

Tuesday, March 31, 2009

அண்ணன் என்ன, அன்புச்சகோதரி என்ன....

அண்ணன் என்ன, அன்புச்சகோதரி என்ன....

மக்களே, சமீபத்தில் கொட்டிய சந்தர்பவாத பாச மழையில் மூழ்கி மீள முடியாமால் தவிக்கும் எனதருமை தமிழக மக்களே, உங்கள் நிலை கண்டு நாமும் எமது மேலான ஆதரவை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம், அரசியல் காரணங்களால், எல்லைகளால் நாம் பிரிந்திருந்தாலும், நீங்கள் மூழ்கி எழுந்த பாச எழுச்சி அலையின் தாக்கம் அருகிலேயே புதுவையில் உள்ள நாங்களும் உணர்ந்தோம்….

இப்படி ஒரு அண்ணனும், சகோதரியும் எங்களுடன் இல்லையே என்று சற்று பொறாமையும் கூட!!… அதற்காக வேண்டுமானால் நீங்களே வைத்து கொள்ளுங்களேன்!! என்று நீங்கள் சொல்ல வருவது எனக்கு சொல்லாமால் புரிகிறது, எதற்கு எனக்கு அந்த பாவம்…. உங்கள் பெருந்தன்மைக்கு எனது கோடான கோடி நன்றிகள்…..

அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, இது பழைய பாடலென உங்களக்கு சொல்ல வேண்டியதில்லை….

அண்ணன் என்ன, அன்புச்சகோதரி என்ன... சந்தர்ப்ப சமயோசித கூட்டணியிலே….. இது நிகழ் காலத்தின் புதிய பரிணாமம்…

அய்யகோ… இந்தக் காட்சியை காண நடிகர் திலகம் இல்லையே… இருந்திருந்தால் வியந்திருப்பார்... இப்படித் தம்மால் நடிக்க முடியவில்லையே என்று….

மக்களே பார்த்தீர்களா... உங்களுக்காகவே இந்த புத்தம் புதிய பாசக் கூட்டணியை சமர்பிக்கிறோம், தயவு செய்து இந்த முறையும் உங்கள் பொன்னான, மகத்தான...

மக்களாகிய உங்களுக்கு, அரசியல் அமைப்பும், நாகரிகம் கண்டெடுத்த மக்களாட்சித் தத்துவம் வழங்கிய மாபெரும் வரப்பிரசதாமான வாக்குரிமையை இந்த பாசக் கூட்டினக்கே பிச்சை போல் பாவித்து வழங்கிடுமாறு உங்கள் பாதம் முதல் அடி பாதம் வரை தொட்டு, பாத பூஜை செய்து வணங்கி வணங்கிக்கொள்கிறோம்......

முடியலடா சாமி!!!.. இவனுங்ககிட்ட அப்பப்ப வோட்ட வாங்கறதுக்குள்ள என்னென்னலாம் பண்ண வேண்டிருக்கு….. சகோதரியிடம் சொல்லி இனி 25 அல்லது முடிந்தால் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்று அரசியல் அமைப்பை மொதல்ல மாத்தனும்…..

மக்களே, இந்த அறிய வாய்ப்பை நழுவ விட வேண்டாம்…

2011ல் அண்ணன் மருத்துவர் ஆட்சி அமையும் பொழுது!!! (தமிழகத்திலா? அல்லது புதுவையிலா? என்று நீங்கள் உங்கள் சிந்தையை குடைவது எனக்கு புரிகிறது, இன்னும் அதை நமது அணியின் வெட்டி வீரர் சரியாக புரியும்படி விளக்கவில்லை, வெளக்கியுடன் தெரியப்படுத்துகிறோம்),


நாங்கள் முன்னர் முழங்கியது...

2001ல் புதுவையில் ஆட்சி!!!

2006ல் தமிழகத்தில் ஆட்சி!!!

இப்பொழுது முழங்கிக்கொண்டிருப்பது 2011ல் இரண்டிலும்!!!, மாதத்தில் 3 வாரம் தமிழகத்தில், 1 வாரம் புதுவையில்!!!!!!

மக்களே மேலும் ஒரு முழக்கம்... 2011ல் அண்ணன் மருத்துவர் ஆட்சி அமையும் பொழுது!!!!!!! தமிழகம் மற்றும் புதுவையில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்!!...

அருமை குடி மக்களே.... உணர்ச்சி வசப்பட வேண்டாம்.... பூரண மதுவிலக்கு எனபது... அரசு வசம் உள்ள மதுக்கடைகளை பூரணமாக விளக்கி... அதாவது மூடி... நமது அணியின் நெருங்கிய உறவினர்களுக்கும் சகாக்களுக்கும் அந்த உரிமங்கள் பெருவாரியாக வழங்கப்படும்....

நமது சின்னையா தடுப்பூசி தொழிற்சாலைகளை மூடியதை போல்..... என்ன சந்தோசம் தானே இப்பொழுது......

Saturday, March 28, 2009

தோட்டத்தில் பூத்திருப்பது காகிதப்பூ...........

தோட்டத்தில் பூத்திருப்பது காகிதப்பூ...........

ஆம் காகிதப்பூ... காந்தி படம் பொறித்த காகிதத்தால் ஆன சந்தர்ப்ப பூ…..

மக்களே கேட்டிர்களா…. நம்புங்கள் இதை… தொண்டன் கேட்டு கொண்டதாலேயே அணி மாறுகிறதாம் மரத்தை வென்றெடுத்த மறவர் அணி, மருத்துவர் அணி….

ஆம் தொண்டன் தான் அரசு தடுப்பூசி தொழிற்சாலைகளை மூடிவிட்டு, தமக்கு வேண்டியவர்களின் நிருவனங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான்...

அணி மாறுகிறோம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போகவேண்டியது தானே..... எந்த விசாரணை குழு உங்களை காரணம் கேட்டுது.... புலன் விசாரணை நடத்தியது?… தெரிந்தது தானே அனைவருக்கும் மருத்துவரின் மகுத்துவம்…..

ஒரு சின்ன அமைச்சர், ஒரு பெரிய அமைச்சர், ஒரு மாவட்ட செயலாளர் கூட வந்து பார்க்கவில்லை, வேதனை படுத்தியதும், உதாசினப் படுத்தியதும், 5 ஆண்டுகள் நிறைவு பெரும் தருவாயில் தான் அறிவிக்க வேண்டும் என்று ஏதாவது வரைமுறை, நல்லொழுக்க விதி இருக்கிறதா மருத்துவர் அணியில்?..

எதற்கு கேட்கிறேன் என்றால் வரைமுறைகளை ஒழுக்கமாக பின்பற்றும் அணி அல்லவா மருத்துவர் அணி....

ஆம் இருக்ககூடும், தமிழகத்தில் தமிழ்ப்பற்றும், ஒழுக்கமும் இவர்களால் தானே கட்டி காக்கப்படுகிறது…..

தமிழக மக்களே, 2001ல் புதுவை மக்கள் புகட்டிய பாடத்தை ஒருமுறை நீங்களும் புகட்ட வேண்டும்,

என்ன முழக்கம், என்ன ஆராவாரம்,

நண்பர்களே, மறந்திருந்தால், இதோ இன்னுமொருமுறை அந்த வேத முழக்கத்தை, மருத்துவரின் பெருநம்பிக்கை கூற்றை நினைவு படுத்துகிறேன்,

2001 இல் புதுவையில் ஆட்சி,
2006 இல் தமிழகத்தில் ஆட்சி,

என்ன ஒரு தொலைநோக்கு பார்வை பாருங்கள்….

கலைஞர் அவர்களே, தேர்தலுக்குப்பின்…

கலைஞர் அவர்களே, தேர்தலுக்குப்பின்…

ஆம், தேர்தலுக்குப்பின் என்ன செய்ய போகிறோம்,

வீடு இருந்தால் தான் கூரை அமைக்க முடியும், ஆட்சி இருப்பதால் தான் இந்த அளவிளாவது நம்மால் ஈழ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க முடிகிறது என்றீர்கள்…. அதனால் தான் கையாளாகாத கைக்கட்சியுடன் இன்னமும் ‘அரசியல் நிர்ப்பந்தம்’ என்ற போர்வையில், மொழி உணர்வு, இன உணர்வு, மனிதாபமானம், இன்னும் என்னவெல்லாம் உள்ளதோ, அனைத்தையும் மறந்து, மறைத்து, மீண்டும் மக்களை சந்திக்க களம் கண்டாகி விட்டது….

இது கையாளாகாத கைக்கழுவ வேண்டிய கைகளின் காலம் என்று எடுத்து கொள்ளலாமா….

சரி, இப்போது அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதை பார்போம்,

சென்ற முறை போல் கழக வேட்பாளர்கள் வெற்றி ஈட்டினால், ஈழக் கொள்கையில் தமிழர் ஆதரவு நிலை கொண்டால் மட்டுமே ஆட்சியில் பங்கேற்போம், ஆட்சிக்கும் ஆதரவு தருவோம் என்று நிர்பந்திப்பீர்களா?

எப்படியாவது, எந்த இழி நிலையையும் கையாண்டு, ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தேசிய மாக்கட்சி, அந்த குறுகிய காலத்திற்காவது நிர்பந்திக்கப்படுமா?

மாறாக, அணைத்து இழிநிலைகளையும் கடந்து கூட மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு, தமிழகத்தில் ஆட்சி பங்கீடு கேட்டால், அப்போது கழகம் என்ன செய்யப்போகிறது? இன வஞ்சகர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்க்க போகிறதா?….

தமிழன் ஈழத்தில் மாண்டால் என்ன, இங்கு தமிழகத்தில் மாண்டால் என்ன, அவனோடு சேர்ந்து நாமும் மாண்டு போவோம் என்று மயிலை மேடையில் நீங்கள் ஊகித்ததை, கையாளாகாத கைகள் ஆட்சியில் பங்கு பெற்று நடைமுறை படுத்த அனுமதிப்பீர்களா?…..

ஆவடியில், தமிழ் மண்ணில் உற்பத்தி செய்யப்பட்ட பீரங்கிகள் எதற்காக கேரளா வழியாக பயணித்து, ஈழ மண்ணில் தமிழன் இரத்தத்தை நுகர வேண்டும், பீரங்கிக்கும் தமிழ்ப்பற்றை போதிக்கிறதா தேசிய கட்சி, தமிழனக்கு இறையாண்மை கற்று கொடுப்பதைப்போல்,

எதற்காக அவ்வளவு தூரம் அவை பயணிக்க வேண்டும், இங்கேயே ஆவடியை சுற்றி, இங்குள்ள தமிழர்களின் தலையை துளைக்கட்டும், அதை கைக்கொட்டி களிக்கட்டும் கைக்கூட்டம்,

நண்பர்களே, தமிழகத்தில் தமிழராய் பிறந்து விட்ட சகோதர சகோதரிகளே, நாமும் இப்பொழுதே பழகிக்கொள்வோம், பதுங்கு குழியில் வாழ்வது எப்படி என்று, நமக்கு அதிகம் சிரமம் இருக்காது அவற்றை கற்றுக்கொள்ள, அருகிலேயே இருக்கிறான் ஈழத்தமிழன்,

கற்று கொடுப்பான் நமக்கு இலவசமாக….

Tuesday, March 10, 2009

வருக வள்ளுவரே வருக....

வருக வள்ளுவரே வருக....

ஆம் வரவேற்பை, இப்போதைய கால சூழலக்கு பொருந்தும் குறள் மூலமாகவே ஆரம்பிக்க முனைகிறேன், (எனினும் குறள் மட்டுமே பொருத்தமே தவிர, சூழலும் நிலையும், என்றும் போல மாறாமலே உள்ளன)....

குறள் எண் 527 (பொருட்பால்; அரசியல்; 53.சுற்றம் தழால்)

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள

உணவை கண்டதும் கரைந்து, தன் இனத்தோடும் சேர்ந்திருந்து காக்கை உண்ணும்; அத்தகைய இயல்பினர்க்கே சிறப்புகளும் வந்து சேரும்.
(நன்றி: உரையாசிரியர் இரா. இராசேந்திரன்)

தமிழன் இப்படி ஒற்றுமையின்றி அவலநிலை கொள்வான் என வள்ளுவர் அன்றே கணித்திருக்க வேண்டும், ஆகவே தான் காக்கையை பார்த்தாவது கற்று கொள்ளுங்கள் என்று எழுதி சென்றுள்ளார்...

ஆனால் இன்றைய நிலை என்ன... மனிதன் காக்கைக்கு உணவு கொடுக்கும் நிலை கடந்து, காக்கை மட்டுமே உணவு கொடுக்க முடியும், என்கிற நிலையில் என் இனம் போராடி கொண்டுள்ளது....

ஆம் நண்பர்களே, காக்கை மட்டுமல்ல, எனக்கு தெரிந்தவரை, மனிதனை தவிர, பெரும்பாலான உயிரினங்களின் குணமும் இதுதான் என்பது என் கணிப்பு, (சற்று அல்லது பெரும் தவறாக இருந்தால் திருத்தவும்);

நான் மனிதனை மட்டும் வேறுபடுத்தும் காரணம், அவன் மட்டும்தான் தனக்குள்ளே எண்ணிலடங்கா பிரிவினைகளை உண்டாக்கி, வள்ளுவரே காக்கையை உதாரானமாக்கும் நிலையை அன்றே உண்டாக்கியுள்ளான் ... அப்படி தான் நான் கருதுகிறேன்...

ஆக வள்ளுவர் என்ன கூறியுள்ளார், காக்கை போல் அரவணைத்து, ஆதரவு தந்து, தமக்குள் இருக்கும் செயற்கையான பிரிவினைகளை கடந்து, ஒரே இனமாக கூடி வாழ்ந்தால் சிறப்பு வந்து சேரும் என்கிறார்...

ஆனால் தற்பொழுது நிலவும் சூழல் என்ன, ஓரினம், ஆம் கல்தோன்றி, மண்தோன்றுமுன் தோன்றிய இனம், காலம் அளவிட முடியாத பழமையான இனம், தன் சொந்த மண்ணில் வாழ உலகத்திடிம் உரிமை கோரும் நிலை, காலம்.

ஈழ சகோதரன் கேட்பது என்ன, கூடி வாழ்ந்தால் சிறப்பு என்கிறார் வள்ளுவர், எங்களக்கு சிறப்பு வேண்டாம், எங்கள் சொந்த மண்ணில் உயிரோடு வாழும், உரிமையோடு வாழும் உரிமை கொடுங்கள் என்கிற அவல நிலைதான் இன்று.

நான் எண்ணுகிறேன், வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்காது இறையாண்மை, மக்களாட்சி, வெளியுறவுக்கொள்கை, இன்னும் பிற மக்களை ஏமாற்றும் கருவிகள்...

நான் வேண்டுவேன் (வாய்ப்பு கிடைத்தால்) இறைவனிடம், இறைவா, ஒருமுறை மீண்டும் அனுப்பிவை எங்கள் வள்ளுவரை (வேண்டாம் தமிழனாக), அவர் கற்க வேண்டியவை நிரம்ப உள்ளன தமிழகத்தில், இறையாண்மையும், தேசிய ஒருமைப்பாடும்....

ஆம் வள்ளுவரே கற்பிக்கிறோம் உமக்கு, நீரும் தமிழர்தானே..... (உமக்கு வேண்டுமானால் சிறப்பு நுழைவு அமைத்து தருகிறோம், ஏனெனில் உமக்கு நல்ல செல்வாக்காமே, உலகமெல்லாம் உமது புகழ் பரவியிருப்பதாக கூறுகிறார்கள், இங்கே தமிழகத்தில் கூட இன்னும் உமது பெயர் நிலைத்து உள்ளது, அது மட்டுமா, கோட்டம் அமைத்துள்ளோம், ஈழ நிலையை, உன் இன, என் இனத்தின் அவல நிலையை நீர் எப்போதும் பார்த்து கொண்டிருக்கவே சிலையாக்கியுள்ளோம் உம்மை அருகிலேயே)

வருக வள்ளுவரே வருக,

கற்று செல்க, வாழ்வியல் நெறிமுறையை, இங்குள்ள தலைவர்களிடமும், அவர்தம் தொண்டர்களிடமும்...

வருக வள்ளுவரே வருக,

இந்த தமிழினம் காத்திருக்கும்,
நீ மீண்டும் குறள் படைப்பாயா என்று;
தமிழனாய் பிறந்துவிட்ட எங்கள் நிலைகண்டு.....

Friday, March 6, 2009

பழம் புளித்தது இப்பொழுது.....

பழம் புளித்தது இப்பொழுது.....

ஆம் நண்பர்களே, கதையில் நரி உணர்த்திய அதே சித்தாந்தத்தை இன்று புரட்சி பல படைத்த தலைவி, மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்த, தூங்கிக் கொண்டிருந்த மக்களை, மாசற்ற மக்களை (பிள்ளைகளை) தாயன்பு கொண்ட புரட்சித்தாய் அழைக்கிறார், எழுச்சி கொள்ள அழைக்கிறார்,

ஆம் நண்பர்களே, ஈழத் தமிழனை காக்க அழைக்கிறார்…..

ஆம் நண்பர்களே, அதிகமில்லை, சில நாட்களுக்கு முன் தான் “போரில் மக்கள் இறப்பது ஒரு இயல்பான நிகழ்வு தான்” என யாருக்குமே உதித்திடாத மாபெரும் சிந்தனையை இவ்வுலகக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, தமது சிந்தனை பெட்டகத்திலிருந்து எடுத்து விளக்கிய புரட்சித்தாய் அழைக்கிறார்…

அது மட்டுமா…

“ஈழம் என்ற ஒரு நிலம் என்றுமே இருந்தது இல்லை” என்ற வரலாற்றை தமிழர்களுக்கு கற்று கொடுத்தார்… ஆகவே தமிழர்கள், இன எதிரியின், பகைவனின், நில ஆக்கிரமப்பையும், அவன் அங்கு புரியும் எண்ணிலிடங்கா அவலங்களையும் வாய்பொத்தி, அடங்கி ஏற்று கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியவர் தான் புரட்சித்தாய்…..

அது மட்டுமா… இன்னும் உள்ளன… புரட்சியின் இதிகாசங்கள்....

“அங்கே இருந்தால் புதைகுழியில் தான் போவீர்கள்.. இங்கே வந்தால் நன்மை உங்களுக்கு தான் அதிகம் எங்களுக்கு விட”... என்று கூவி கூவி கூவியதெல்லாம்...
மக்களே.. அதையா இன்னும் நீங்கள் என்ன என்று கேட்கிறீர்கள்... மறந்திருப்பீர்கள் என்று நினைத்தோம்.....

இல்லை இல்லை... அது போன மாசம்... நாங்கள் அவர்களை அழைக்கவே இல்லை... இப்பொழுது இதை சொல்கிறோம்..... முடிந்தால், அடுத்த மாசம் இதையே சொல்வோம், முடிந்தால் (சூழ்நிலைகளை பொருத்து)...

ஆகவே... புரட்சியின் படையினரே... புறப்படுவீர்.... உங்கள் தாய் அழைக்கிறார்..... இன்னுமொரு புரட்சி செய்ய .....

Tuesday, February 24, 2009

தமிழருவி மணியன் விடுதலை...

தமிழருவி மணியன் விடுதலை...

ஆம், தேசிய கட்சியிலிருந்து அவர் விலகியது ஒரு பண்பார்ந்த தமிழ் ஆர்வலர்க்கு கிடைத்த விடுதலையாகவே நான் உணர்கிறேன். அவரை பற்றி அதிகமாக அறியாதவன் நான் (ஆம் வன்முறைக்கும், உட்கட்சி பூசல்களுக்கும் மட்டுமே நம் ஊரில் பல ஊடகங்கள் பறைசாற்றுவது வேறு விஷயம்)

எனினும் குமுதம் இணையதளத்தின் நேர்முகம் நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்து, அதில் அவருடைய கருத்துக்கள், உணர்வுகள், அவர் சார்ந்திருக்ககூடிய கட்சிக்கு சற்றும் உகந்ததில்லை என்பதை உணர்த்தியது, மேலும் அவர் உரையாடலின் பல இடங்களில், பெரும் மன வேதனையுடனும், ஆதங்கங்களுடனையே கட்சியில் நீடீத்திருந்ததை உணர முடிந்தது,

அந்த நேர்காணல் என்னை மிகவும் கவர்ந்தது …. அவரை பற்றி இந்நாள் வரை அறியாமல் இருந்தது சற்று வருத்தமாகவும் இருந்தது.... ஆம் சிறந்த தமிழ் ஆர்வலர், தமிழர் நலன் விரும்புவர், காந்தியவாதி, ஆம் இந்த குணங்கள் உடையவர் கண்டிப்பாக இன்றைய நிலையில் தேசிய கட்சியில் நீடிப்பது கடினமே ...

தேர்ந்த உட்கட்சி பூசல் வேதாந்தம், தலைமை எது சொன்னாலும் தலையாட்டும் வெற்று தலைகளுக்கு மட்டுமே தேசிய கட்சியில் இடம், பதவி எல்லாம் ..... ஆகவே அதை பற்றி மேலும் விவரிக்க ஒன்றும் இல்லை ....

தமிழருவி மணியனை போன்று இன்று பலரும் பல கட்சியில் நீடிப்பது தவிர்க்க முடியாத உண்மை தான் …. ஆம் பல கொள்கை, கோட்பாடு, மாண்பினால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணையும் பலர், பல கட்டங்களில் கட்சியின் அணுகுமுறைகளினால் வருத்தப்பட்டாலும், காலத்திற்கேற்ப நிலவும் சூழல்களால் வேதனையுடன் கட்சியில் தொடர்வதும், சிலர் எதிர்கால பதவிக்கும், இன்னும் சிலர் நிகழ்கால பதவிக்கும் ஊறு விளையாமல் இருக்க அதை ஒரு பெரிய நிகழ்வாகவே கருதாமல், அடுத்த வீடு பிரச்சினை, நமக்கென்ன, என்று தொடர்வதும் நாம் அறியும், அறிந்த நிதர்சன உண்மை, மிகச்சிலரே வேதனையின் விளிம்பில் உதறி எறிவது,

அந்த வகையில் தமிழருவி மணியனின் இந்த செயல் பாராட்டத்தக்கது, கட்சியை எதிர்ப்பதால் நான் இதை சொல்லவில்லை, தமிழர் நலனை உணர்த்தியதால், காலம் கடந்து எனினும், பாராட்டத்தக்கது ……

ஆனால் இதை தேசிய கட்சி ஒரு பொருட்டாக எண்ணுமா என்றால் …. இல்லை என்பது தான் எதார்த்தம் ….. ஆம் காந்தியவாதிகளுக்கு இனி காந்தி பிறந்த தேசத்தில் பொருட்டில்லை, ஆம் தேர்தல் காலங்களில் மட்டும் அதை கையாளுபவர்கள் தேசிய கட்சியினர் …..

தமிழகத்தின் ஆளும் கட்சியின் நிலையும் கிட்டத்தட்ட தமிழருவி மணியினை போன்றது தான் …. நிர்ப்பந்தம் ..காலச்சூழல், இப்படி எத்தனையோ வார்த்தைகளை நாம் இன்று பல கட்டுரைகளில் காண முடிகின்றது ….. ஆம் மக்கள் அளித்த நிலையற்ற வாக்களிப்பும், சந்தர்ப்பவாத கட்சிகளின் செயற்பாடுகளுமே இன்றைய நிலையின் பல காரணங்களில் சில,

ஆகவே தான் தேசிய கட்சி தனது நிழல் பலத்தை நிஜமாக்க முயல்கிறது, ஆட்சியே தம் கை விரலில் என்ற மாயையுடன் ஒரு இன அழிப்பை கைக்கொட்டி ஆர்ப்பரித்து வேடிக்கை பார்க்கிறது .... தமிழனுக்கு இறையாண்மை, வெளியுறவுக்கொள்கை கற்றுக்கொடுக்கிறது ... இன்னும் எத்தனை காலம் நிலைக்கும் நிழலின் தாக்கம் .... அந்தி சாய்ந்தால் நிழலின் நிலை என்ன .... இந்த நிழல் பலம் கூட எப்படி கிடைத்தது தேசிய கட்சிக்கு ... தனியே நின்றால் கிடைத்திருக்குமா இந்த நிழல் பலம் ... அல்லது அந்த துணிவு தான் உள்ளதா தேசிய கட்சிக்கு .....

இன்னும் சில நாட்களில் தெரிய உள்ளன மாற்றங்கள் .... ஈழ தமிழனின் தலை மேல் வீசிய ஆயுதங்களுடன் நில்லாத தேசிய கட்சி, இனி வரும் நாட்களில் ஆளும் கட்சியின் முதுகில் குத்த போவதையும் இங்கிருக்கும் தமிழன் காணத்தான் போகிறான் .... தேசிய கட்சியின் இழி நிலையை இன்னும் ஒருமுறை உணரத்தான் போகிறான் ....

வேதனைகளிலிருந்து மீண்டு விடுதலை அடைந்துள்ள தமிழருவி மனியனக்கு மேலும் ஒருமுறை பாராட்டை தெரிவித்து, அவருடைய தமிழர் நல பணியும், காந்தியமமும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோமாக.....

Tuesday, February 17, 2009

புரட்சி விழித்து கொண்டது....

புரட்சி விழித்து கொண்டது....

ஆம் நண்பர்களே... திடீரென்று இன்று புரட்சி விழித்து கொண்டது... இப்பொழுதுதான் கனவு கலைந்தது போல.... சற்றும் காலம் தாழ்த்தாமல், வரும் சனியே புரட்சிஎன்றும், தூதரகத்தை இழுத்து மூடவேண்டும் என்றும், புரட்சி கர்ஜிக்கிறது, எவர்க்கும் கிடைக்காத தூதரகத்தின் சாவி இவரிடம் மட்டுமே இருப்பது போல், சனியன்று சென்று அதை தாழிடப்போகிறது புரட்சி.....

தேசிய கட்சியுடன் பேரம், நினைத்தார் போல் கைகூடவில்லை... ஆகவே தான் இந்த தீடீர் எழுச்சி.... மாதங்கள் பல கடந்தபின் எழுந்துள்ள இந்த பாசப்புரட்சி....

ஆம் நண்பர்களே, தமிழனின் நிலை இதுதான்.... அங்கு ஈழத்தில் குண்டு மழைக்கு இடையே தமிழ் அடையாளத்தை நிலைநாட்ட புரட்சி... இங்கு புரட்சிகளுக்கு இடையே தமிழனின் காலம் நகர்கிறது, ஆம் வேதனையின் விளிம்பில், சொந்தங்களின் துயரில்... ஓங்கி குரலெழுப்பி ஆர்பரிப்பதை தவிர..... இதோ இதை போல் தனக்கு தானே எழுதுவதை தவிர... எதுவும் செய்ய முடியவில்லை, தெரியவும்மில்லை....

இன வஞ்சகர்களுக்கு பாடம் புகட்ட முனைப்பட்டால் கூட எந்த கூட்டத்துக்கு பாடம் புகட்டுவது... இருக்கும் அணைத்து கூட்டத்திலும் இன வஞ்சகன் இருக்கிறான்....

நண்பர்களே... இன உறவுகளே.... இந்த இக்கட்டான சூழலில்... நாம் பாடம் புகட்ட வேண்டியது தேசிய கட்சிக்குத்தான்.... ஆட்சியை கைப்பற்ற மிக முக்கிய ஆதாரமாக இருந்த தமிழனின் அன்றைய வாக்குரிமை... அன்று வருக வருக என்று வரவேற்றது... இன்று அவன் கேட்கும் ஈழ சொந்தங்களின் அமைதிக்கு செவி மறுக்கிறது....

எனவே உறவுகளே... இப்பொழுது ஒவ்வொரு கூட்டத்திலும் இன உணர்வாளனும், இன வஞ்சகனும்... கை கோர்த்து... பிச்சை கேட்கிறான்.... வாக்கு தா என்று...... எனினும் உறவுகளே... இன உணர்வாளனாலும் அவன் வஞ்சகனோடு இருப்பதனால், அவனக்கு தான் முதலில் பாடம் புகட்ட வேண்டும் .....

ஆகவே சுயேச்சை வென்றாலும் பரவாயில்லை என... அவனாவது எண்ணிக்கையில் தனிமைபடுதப்பட்டாலும், அவனாவது தமிழனுக்காக குரல் கொடுப்பான் என எப்போதும் போல் இப்போதும் நினைப்போம்....

அவன் (சுயேச்சை) விலைபோகாதவரை......

Friday, January 30, 2009

செத்த பாம்பை அடிக்க வேண்டாம் நண்பர்களே

நண்பர்களே ...

நான் விளக்க விரும்பவது தேசத்தை ஆளும் பழம்பெரும் தேசிய கட்சி, 50 ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆண்டு, நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ள பாழடைந்த, பாழாகிபோன, பூசல்கள் மட்டுமே நிறைந்த,

இதற்கு மேலும் இழிவு படுத்த முடியாத ஒரு தேசிய கட்சி இருப்பது என்றால், நான் என்ன செய்வது, என்னால் அதை சொல்ல கூட முடியவில்லை, ஆகவே நண்பர்களே, நான் உங்களுக்கு சொல்லும் கருத்து, செத்த பாம்பை அடிக்க வேண்டிய நிலை இங்கே (தமிழகத்தில்) இல்லை, நாம் இப்போது நமது முழு கவனத்தையும் ஈழ விடுதலைக்கும், ஈழ சகோதர நல்வாழ்வுக்கும் ஏற்ற பணிகளில் செலுத்துவோம், சாலையில் வீசப்பட்ட செத்த பாம்பு எப்படி மிதிபட்டு நசுங்கி தானாகவே இருந்த இடம் இல்லாமல் மறைகிறதோ, அது போலவே இந்த தேசிய கட்சியும், இப்போது இருக்கும் சொற்ப ஆதரவு கூட (ஒண்டி பிழைக்க, அடுத்த கட்சியுடன் பிச்சை பெற்று, சட்டசபைக்குள் நுழைந்து இன்று ஆட்சியே இவருடயதுபோல் மெத்தனமாக திரியும் இன வஞ்சகர்கள்) இல்லாமல் தானாகவே மங்கி போவார்கள்,

ஆகவே நாம் இந்த வீணாய் போனவர்களை சீண்டாமல் இருப்பதே சாளச்சிறந்தது, தமிழகத்தில் இப்பொழுது எழுந்துள்ள இன சீற்றத்தில் இந்த தேசிய கட்சி மண்ணோடு மண்ணாகும்...

இதை கூட்டணிக்குள் கொண்டிருக்கும் மாநிலத்தை ஆளும கட்சியும் உணர வேண்டும், நிகழ்கால எழுச்சியின் தாக்கம் ஆளும் கட்சிக்கு பெரும் இழப்புகளை உண்டாக்கும் என்பதை கழகத்தலைமை உணர வேண்டும்,

நண்பர்களே, எனினும் இந்த தேசிய கட்சிக்கு நாம் பாடம் புகட்டத்தான் வேண்டும், நம் தமிழ் பிரந்தியத்தில் புதுவையில் மட்டுமே இதன் ஆளுமை இருப்பது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை தரலாம், ஆனால் இது தான் நல்ல தருணம், இந்த இன எழுச்சியில் எழும் நம் சீற்றம் புதுவையில் ஒளிரும் இந்த தேசிய கட்சியின் ஒளியை சுவடே இல்லாதவாறு அணைக்க வேண்டும்... அங்கும் கூட்டணி என்ற போர்வையில் தான் இவர்களின் தீப ஒளி அணையும் தருவாயில் உள்ளது, ஆகவே அதை நாம் முழுமையாக அணையுமாறு செய்ய வேண்டும், அதற்கான ஆயுத்த நடவடிக்கைகளை நமது பெ.தி.க தோழர்கள் கடந்த சில நாட்களாக சிறப்பாக செய்து வருகிறார்கள், அவர்களுக்கு நாம் நமது நன்றியையும் பாராட்டையும் இந்த வேளையில் மனப்பூர்வமாக தெரிவித்துகொள்வோம், மென்மேலும் அவர் பணி தொடர நாம் வாழ்த்துகளை தெரிவிப்போமாக....





Thursday, January 29, 2009

தலைவர், தலைவியின் தூரப்பார்வையும், தொலைதூரப்பார்வையும்.....

ஆம் இந்த வினா என்னை இத்தருணத்தில் சிந்திக்க செய்கிறது,

தமிழின உணர்வாளர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் இடையே வேறுபாட்டை உணரச் செய்கிறது...எங்கோ தொலைதூரத்தில் நடக்கும் விமானக் குண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தலைவன், தலைவி என தம்மை தாமே போற்றிக்கொள்ளும் தமிழ் இன வஞ்சகர்களும், எட்டப்ப கும்பலும், கரை தாண்டினால் தரை தட்டும் தூரத்தில், இன்னலை மட்டுமே சுவாசிக்கும் என் இன சகோதரன் குண்டு மழைக்கு இடையே தினம் தினம் தன் வசிப்பிடத்தை மாற்றுவதை மட்டும் அறிய முடியவில்லை, அறியவும் மனமில்லை, இந்த தன்மானமற்ற இனவஞ்சக கூட்டத்திற்கும் அதன் தலைவன் தலைவிக்கும்.

தமிழர்களே, என் இன உறவுகளே, தோழர்களே, இனம் காக்க போராடும் நண்பர்களே, இந்த தருணத்தில் தமிழகத்தில் வாழும் நாம் இரண்டு முனைகளில் நம் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்,ஒன்று தாய் நிலத்தை காக்கும் போராட்டத்தில் உயிரை துச்சமென எண்ணி போரிடும் வீரர்களுக்கும், இந்த போராட்டத்தில் அல்லலுற்று வாடும் நம் உறவுகளுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை நல்கி அவர்களுக்கு போராடும் நம்பிக்கையை தருவதே ஆகும்; இரண்டாவது, தமிழனக்கு, தமிழ் இனத்துக்கு எதிரி வேற்று நாட்டவனோ, வேற்று கிரகத்தவனோ அல்ல, தமிழன் என்று தன்னை கூறிக்கொள்ளும் இனவஞ்சகன்தான் என்று உணர்ந்தவர்களின் வாய்மொழியை நாமும் இந்த கால சூழலில் உணர காரணமான நம்மிடையே வாழும் இனவஞ்சகர்களை எதிர்கொண்டு அவர்களின் சதிச்செயலை காற்றோடு காற்றாக சிதரச்செய்வதே ஆகும். ஆம் பல முனைகளில் மண்ணை காக்க போராடும் தமிழனக்கு ஆதரவாக நாம் இந்த இரண்டு முனைகளில் போராடிதான் ஆகவேண்டும். இனம் காக்க, மன்னர்கள் கட்டிக்காத்த நிலத்தை மீட்க தமிழினமே ஒன்றுபடுவோம், ஒன்றுபட்டு வெற்றிகொண்டான் என்று வரலாறு படைப்போம்.
என் மொழி பேசும் சகோதரனின் போராட்டம் பற்றி சமீபத்தில் மட்டுமே நான் உன்னிப்பாக கவனிக்க, என்றுமே நான் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை போன்ற சொற்களை பெரிதும் கவனித்தது இல்லை, இந்த கால நிலையில் கூட எனக்கு பிரிவினை எண்ணம் ஒரு தேவையற்ற மாயையாகவே தோன்றுகிறது. ஆனால் இந்த எண்ணம் மங்கி விடுமோ என்ற ஐயமும் சற்றே எங்கோ ஒரு ஓரத்தில் எழும்பும் எண்ணமும் தோன்றுவதற்கான அறிகுறிகள், ஆம் அறிகுறிகள் மட்டுமே தென்படுகின்றன, அவ்வப்போதைய வானிலை அறிக்கை போல் அவை அறிகுறிகளாகவே அமைய வேண்டும் என்பது தான் எனது எண்ணமும் கூட. ஆனால் இவை அனைத்தும் நம் மத்திய அரசு, ஆம் நம் மத்திய அரசின், இப்போதைய மத்திய அரசு மற்றும் இனி வரும் மத்திய அரசுகளின் வெளியுறவு கொள்கை, குறிப்பாக ஈழ கொள்கையை பொறுத்தே அமையும் என்பது எனது தவிர்க்க முடியாத விமர்சனம்.

இன்று காலை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சீரிய இளம் பேச்சாளர் ஒருவர் கூறுகிறார், தமிழன் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில், கார்கிலுக்கு ஒன்றுபட்டு வெகுண்டெழும் தமிழன் ஈழத்து இனம் காக்க உள்ளூர் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபடவேண்டும், என்று....

தமிழனின் நலன் காக்க, தமிழ் இனம் காக்க உதவாத அரசை தமிழன் பொருத்து கொள்ளும் காலமும் எல்லையை கடக்கும் நிலையை மத்திய அரசு தெரிந்தே உருவாக்க வேண்டாம் என்றும், அந்நிலை உருவாகாத கனம் வரை மட்டுமே தமிழன் ஒருமைப்பாடு, இறையாண்மை, இன்னும் ஏனைய சொற்களுக்கு கட்டுபடுவான் என்றும், எல்லை கடந்த பின்னர், பொறுமை இழந்தபின், அது கட்டுபாடற்ற காட்டாற்று வெள்ளம் ஊரை உருககொலைப்பது போல், எதற்கும் துணிந்தவனாவன் என்பது எனது எண்ணம், இன உணர்வாளர்களின் எண்ணமும் இதுவாகும் என்பது எனது நம்பிக்கையும் கூட.


பள்ளிப்பருவத்தில் காலை வேளையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதத்தையும் பாடுவதே என் தலைமுறை நண்பர்களும், இன்றைய பள்ளி சிறார்களும் கடைபிடிக்கிறார்கள். ஆனால், ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடும் நிலையை உருவாக்குவதும், இன்றைய நிலையை நீடிக்கச் செய்வதும் நம் மத்திய அரசின் தமிழர் இன கொள்கைகளை பொறுத்தே அமையும் என்பதில் ஐயமில்லை. நண்பர்களே நம் மாணவர்கள் ஒரு பாடல் மட்டுமே பாட வேண்டிய நிலை வரவேண்டும் என்று நான் விரும்பவில்லை, ஆனால் நாம் அந்த நிலைக்கு தள்ளப்பட்டால், நம் மத்திய அரசின் இன்றைய நிலையும், எதிர்கால நிலையும் இதே நோக்கில் தொடருமேயானால், நாம் எந்த சூழலையும் எதிர்கொள்ள நாம் நம்மை பண்படுத்திக்கொள்ள வேண்டும்,

தமிழர்களே, என் இன உறவுகளே,

இன வஞ்சகர்களை இனம் காண்போம் அவர்தம் நயவஞ்சக சதிச்செயலை முறியடிப்போம்

இனம் காப்போம், மொழி காப்போம்......