Friday, January 30, 2009

செத்த பாம்பை அடிக்க வேண்டாம் நண்பர்களே

நண்பர்களே ...

நான் விளக்க விரும்பவது தேசத்தை ஆளும் பழம்பெரும் தேசிய கட்சி, 50 ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆண்டு, நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ள பாழடைந்த, பாழாகிபோன, பூசல்கள் மட்டுமே நிறைந்த,

இதற்கு மேலும் இழிவு படுத்த முடியாத ஒரு தேசிய கட்சி இருப்பது என்றால், நான் என்ன செய்வது, என்னால் அதை சொல்ல கூட முடியவில்லை, ஆகவே நண்பர்களே, நான் உங்களுக்கு சொல்லும் கருத்து, செத்த பாம்பை அடிக்க வேண்டிய நிலை இங்கே (தமிழகத்தில்) இல்லை, நாம் இப்போது நமது முழு கவனத்தையும் ஈழ விடுதலைக்கும், ஈழ சகோதர நல்வாழ்வுக்கும் ஏற்ற பணிகளில் செலுத்துவோம், சாலையில் வீசப்பட்ட செத்த பாம்பு எப்படி மிதிபட்டு நசுங்கி தானாகவே இருந்த இடம் இல்லாமல் மறைகிறதோ, அது போலவே இந்த தேசிய கட்சியும், இப்போது இருக்கும் சொற்ப ஆதரவு கூட (ஒண்டி பிழைக்க, அடுத்த கட்சியுடன் பிச்சை பெற்று, சட்டசபைக்குள் நுழைந்து இன்று ஆட்சியே இவருடயதுபோல் மெத்தனமாக திரியும் இன வஞ்சகர்கள்) இல்லாமல் தானாகவே மங்கி போவார்கள்,

ஆகவே நாம் இந்த வீணாய் போனவர்களை சீண்டாமல் இருப்பதே சாளச்சிறந்தது, தமிழகத்தில் இப்பொழுது எழுந்துள்ள இன சீற்றத்தில் இந்த தேசிய கட்சி மண்ணோடு மண்ணாகும்...

இதை கூட்டணிக்குள் கொண்டிருக்கும் மாநிலத்தை ஆளும கட்சியும் உணர வேண்டும், நிகழ்கால எழுச்சியின் தாக்கம் ஆளும் கட்சிக்கு பெரும் இழப்புகளை உண்டாக்கும் என்பதை கழகத்தலைமை உணர வேண்டும்,

நண்பர்களே, எனினும் இந்த தேசிய கட்சிக்கு நாம் பாடம் புகட்டத்தான் வேண்டும், நம் தமிழ் பிரந்தியத்தில் புதுவையில் மட்டுமே இதன் ஆளுமை இருப்பது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை தரலாம், ஆனால் இது தான் நல்ல தருணம், இந்த இன எழுச்சியில் எழும் நம் சீற்றம் புதுவையில் ஒளிரும் இந்த தேசிய கட்சியின் ஒளியை சுவடே இல்லாதவாறு அணைக்க வேண்டும்... அங்கும் கூட்டணி என்ற போர்வையில் தான் இவர்களின் தீப ஒளி அணையும் தருவாயில் உள்ளது, ஆகவே அதை நாம் முழுமையாக அணையுமாறு செய்ய வேண்டும், அதற்கான ஆயுத்த நடவடிக்கைகளை நமது பெ.தி.க தோழர்கள் கடந்த சில நாட்களாக சிறப்பாக செய்து வருகிறார்கள், அவர்களுக்கு நாம் நமது நன்றியையும் பாராட்டையும் இந்த வேளையில் மனப்பூர்வமாக தெரிவித்துகொள்வோம், மென்மேலும் அவர் பணி தொடர நாம் வாழ்த்துகளை தெரிவிப்போமாக....





Thursday, January 29, 2009

தலைவர், தலைவியின் தூரப்பார்வையும், தொலைதூரப்பார்வையும்.....

ஆம் இந்த வினா என்னை இத்தருணத்தில் சிந்திக்க செய்கிறது,

தமிழின உணர்வாளர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் இடையே வேறுபாட்டை உணரச் செய்கிறது...எங்கோ தொலைதூரத்தில் நடக்கும் விமானக் குண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தலைவன், தலைவி என தம்மை தாமே போற்றிக்கொள்ளும் தமிழ் இன வஞ்சகர்களும், எட்டப்ப கும்பலும், கரை தாண்டினால் தரை தட்டும் தூரத்தில், இன்னலை மட்டுமே சுவாசிக்கும் என் இன சகோதரன் குண்டு மழைக்கு இடையே தினம் தினம் தன் வசிப்பிடத்தை மாற்றுவதை மட்டும் அறிய முடியவில்லை, அறியவும் மனமில்லை, இந்த தன்மானமற்ற இனவஞ்சக கூட்டத்திற்கும் அதன் தலைவன் தலைவிக்கும்.

தமிழர்களே, என் இன உறவுகளே, தோழர்களே, இனம் காக்க போராடும் நண்பர்களே, இந்த தருணத்தில் தமிழகத்தில் வாழும் நாம் இரண்டு முனைகளில் நம் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்,ஒன்று தாய் நிலத்தை காக்கும் போராட்டத்தில் உயிரை துச்சமென எண்ணி போரிடும் வீரர்களுக்கும், இந்த போராட்டத்தில் அல்லலுற்று வாடும் நம் உறவுகளுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை நல்கி அவர்களுக்கு போராடும் நம்பிக்கையை தருவதே ஆகும்; இரண்டாவது, தமிழனக்கு, தமிழ் இனத்துக்கு எதிரி வேற்று நாட்டவனோ, வேற்று கிரகத்தவனோ அல்ல, தமிழன் என்று தன்னை கூறிக்கொள்ளும் இனவஞ்சகன்தான் என்று உணர்ந்தவர்களின் வாய்மொழியை நாமும் இந்த கால சூழலில் உணர காரணமான நம்மிடையே வாழும் இனவஞ்சகர்களை எதிர்கொண்டு அவர்களின் சதிச்செயலை காற்றோடு காற்றாக சிதரச்செய்வதே ஆகும். ஆம் பல முனைகளில் மண்ணை காக்க போராடும் தமிழனக்கு ஆதரவாக நாம் இந்த இரண்டு முனைகளில் போராடிதான் ஆகவேண்டும். இனம் காக்க, மன்னர்கள் கட்டிக்காத்த நிலத்தை மீட்க தமிழினமே ஒன்றுபடுவோம், ஒன்றுபட்டு வெற்றிகொண்டான் என்று வரலாறு படைப்போம்.
என் மொழி பேசும் சகோதரனின் போராட்டம் பற்றி சமீபத்தில் மட்டுமே நான் உன்னிப்பாக கவனிக்க, என்றுமே நான் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை போன்ற சொற்களை பெரிதும் கவனித்தது இல்லை, இந்த கால நிலையில் கூட எனக்கு பிரிவினை எண்ணம் ஒரு தேவையற்ற மாயையாகவே தோன்றுகிறது. ஆனால் இந்த எண்ணம் மங்கி விடுமோ என்ற ஐயமும் சற்றே எங்கோ ஒரு ஓரத்தில் எழும்பும் எண்ணமும் தோன்றுவதற்கான அறிகுறிகள், ஆம் அறிகுறிகள் மட்டுமே தென்படுகின்றன, அவ்வப்போதைய வானிலை அறிக்கை போல் அவை அறிகுறிகளாகவே அமைய வேண்டும் என்பது தான் எனது எண்ணமும் கூட. ஆனால் இவை அனைத்தும் நம் மத்திய அரசு, ஆம் நம் மத்திய அரசின், இப்போதைய மத்திய அரசு மற்றும் இனி வரும் மத்திய அரசுகளின் வெளியுறவு கொள்கை, குறிப்பாக ஈழ கொள்கையை பொறுத்தே அமையும் என்பது எனது தவிர்க்க முடியாத விமர்சனம்.

இன்று காலை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சீரிய இளம் பேச்சாளர் ஒருவர் கூறுகிறார், தமிழன் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில், கார்கிலுக்கு ஒன்றுபட்டு வெகுண்டெழும் தமிழன் ஈழத்து இனம் காக்க உள்ளூர் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபடவேண்டும், என்று....

தமிழனின் நலன் காக்க, தமிழ் இனம் காக்க உதவாத அரசை தமிழன் பொருத்து கொள்ளும் காலமும் எல்லையை கடக்கும் நிலையை மத்திய அரசு தெரிந்தே உருவாக்க வேண்டாம் என்றும், அந்நிலை உருவாகாத கனம் வரை மட்டுமே தமிழன் ஒருமைப்பாடு, இறையாண்மை, இன்னும் ஏனைய சொற்களுக்கு கட்டுபடுவான் என்றும், எல்லை கடந்த பின்னர், பொறுமை இழந்தபின், அது கட்டுபாடற்ற காட்டாற்று வெள்ளம் ஊரை உருககொலைப்பது போல், எதற்கும் துணிந்தவனாவன் என்பது எனது எண்ணம், இன உணர்வாளர்களின் எண்ணமும் இதுவாகும் என்பது எனது நம்பிக்கையும் கூட.


பள்ளிப்பருவத்தில் காலை வேளையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதத்தையும் பாடுவதே என் தலைமுறை நண்பர்களும், இன்றைய பள்ளி சிறார்களும் கடைபிடிக்கிறார்கள். ஆனால், ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடும் நிலையை உருவாக்குவதும், இன்றைய நிலையை நீடிக்கச் செய்வதும் நம் மத்திய அரசின் தமிழர் இன கொள்கைகளை பொறுத்தே அமையும் என்பதில் ஐயமில்லை. நண்பர்களே நம் மாணவர்கள் ஒரு பாடல் மட்டுமே பாட வேண்டிய நிலை வரவேண்டும் என்று நான் விரும்பவில்லை, ஆனால் நாம் அந்த நிலைக்கு தள்ளப்பட்டால், நம் மத்திய அரசின் இன்றைய நிலையும், எதிர்கால நிலையும் இதே நோக்கில் தொடருமேயானால், நாம் எந்த சூழலையும் எதிர்கொள்ள நாம் நம்மை பண்படுத்திக்கொள்ள வேண்டும்,

தமிழர்களே, என் இன உறவுகளே,

இன வஞ்சகர்களை இனம் காண்போம் அவர்தம் நயவஞ்சக சதிச்செயலை முறியடிப்போம்

இனம் காப்போம், மொழி காப்போம்......