ஆங் சான் சூகிக்கு மகாத்மா காந்தி சர்வதேச விருது
இந்த தலைப்பை படித்தவுடன் நான் சற்று அவசரப்பட்டு இந்த விருதை மத்திய அரசுதான் வழங்குகிறதோ என்று எண்ணி விட்டேன்,
முழுமையாக கட்டுரையை படித்த பின்புதான், விருதை வழங்குவது தென் ஆப்பிரிக்காவின் அறக்கட்டளை என்று புரிந்தது,
ஆனாலும் எனக்கு இதில் பெரும் வியப்பு ஏற்படவில்லை, மத்திய அரசு இதே போன்று மேலும் ஒரு விருதை அறிவித்தாலும் வியப்பில்லை,
ஏனென்றால் முடிந்தவரை, போதும் போதும், வேண்டாம் வேண்டாம் என்று கூறும் அளவுக்கு மியான்மார் இராணுவத்துக்கு அணைத்து விதமான உதவிகளையும் செய்து, மறுபுறம் அமைதி விருதையும் வழங்கலாம்,
ஏனென்றால் வல்லரசை நோக்கி நகரும் நாடல்லவா, வல்லரசுகள் செய்யும் நாகரிக நயவஞ்சகம் இது தானே,
பிராந்திய அரசியல் முக்கியத்துவம், வல்லமை, பாதுகாப்பு, இப்படி பல,
தனி மனிதனக்கு எந்த விதத்திலும் பயன்படாத வார்த்தைகள் தான்,
மக்களாட்சியின் அற்புத பயன்பாடுகள்,
மக்களுக்கு என்றுமே நன்மை பயக்காத அற்புத சொற்களஞ்சியம்,
மக்கள் இதை உணரும்வரை ஆட்சியாளர்களின் சொர்க்க களம்.....
ஏதோ முடிந்த வரை நானும் சொற்களை சொல்லி உள்ளேன்!!!!!
வாழ்க மக்களாட்சி.... வாழ்க ஆட்சியாளர்கள்....
No comments:
Post a Comment