Tuesday, March 31, 2009

அண்ணன் என்ன, அன்புச்சகோதரி என்ன....

அண்ணன் என்ன, அன்புச்சகோதரி என்ன....

மக்களே, சமீபத்தில் கொட்டிய சந்தர்பவாத பாச மழையில் மூழ்கி மீள முடியாமால் தவிக்கும் எனதருமை தமிழக மக்களே, உங்கள் நிலை கண்டு நாமும் எமது மேலான ஆதரவை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம், அரசியல் காரணங்களால், எல்லைகளால் நாம் பிரிந்திருந்தாலும், நீங்கள் மூழ்கி எழுந்த பாச எழுச்சி அலையின் தாக்கம் அருகிலேயே புதுவையில் உள்ள நாங்களும் உணர்ந்தோம்….

இப்படி ஒரு அண்ணனும், சகோதரியும் எங்களுடன் இல்லையே என்று சற்று பொறாமையும் கூட!!… அதற்காக வேண்டுமானால் நீங்களே வைத்து கொள்ளுங்களேன்!! என்று நீங்கள் சொல்ல வருவது எனக்கு சொல்லாமால் புரிகிறது, எதற்கு எனக்கு அந்த பாவம்…. உங்கள் பெருந்தன்மைக்கு எனது கோடான கோடி நன்றிகள்…..

அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, இது பழைய பாடலென உங்களக்கு சொல்ல வேண்டியதில்லை….

அண்ணன் என்ன, அன்புச்சகோதரி என்ன... சந்தர்ப்ப சமயோசித கூட்டணியிலே….. இது நிகழ் காலத்தின் புதிய பரிணாமம்…

அய்யகோ… இந்தக் காட்சியை காண நடிகர் திலகம் இல்லையே… இருந்திருந்தால் வியந்திருப்பார்... இப்படித் தம்மால் நடிக்க முடியவில்லையே என்று….

மக்களே பார்த்தீர்களா... உங்களுக்காகவே இந்த புத்தம் புதிய பாசக் கூட்டணியை சமர்பிக்கிறோம், தயவு செய்து இந்த முறையும் உங்கள் பொன்னான, மகத்தான...

மக்களாகிய உங்களுக்கு, அரசியல் அமைப்பும், நாகரிகம் கண்டெடுத்த மக்களாட்சித் தத்துவம் வழங்கிய மாபெரும் வரப்பிரசதாமான வாக்குரிமையை இந்த பாசக் கூட்டினக்கே பிச்சை போல் பாவித்து வழங்கிடுமாறு உங்கள் பாதம் முதல் அடி பாதம் வரை தொட்டு, பாத பூஜை செய்து வணங்கி வணங்கிக்கொள்கிறோம்......

முடியலடா சாமி!!!.. இவனுங்ககிட்ட அப்பப்ப வோட்ட வாங்கறதுக்குள்ள என்னென்னலாம் பண்ண வேண்டிருக்கு….. சகோதரியிடம் சொல்லி இனி 25 அல்லது முடிந்தால் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்று அரசியல் அமைப்பை மொதல்ல மாத்தனும்…..

மக்களே, இந்த அறிய வாய்ப்பை நழுவ விட வேண்டாம்…

2011ல் அண்ணன் மருத்துவர் ஆட்சி அமையும் பொழுது!!! (தமிழகத்திலா? அல்லது புதுவையிலா? என்று நீங்கள் உங்கள் சிந்தையை குடைவது எனக்கு புரிகிறது, இன்னும் அதை நமது அணியின் வெட்டி வீரர் சரியாக புரியும்படி விளக்கவில்லை, வெளக்கியுடன் தெரியப்படுத்துகிறோம்),


நாங்கள் முன்னர் முழங்கியது...

2001ல் புதுவையில் ஆட்சி!!!

2006ல் தமிழகத்தில் ஆட்சி!!!

இப்பொழுது முழங்கிக்கொண்டிருப்பது 2011ல் இரண்டிலும்!!!, மாதத்தில் 3 வாரம் தமிழகத்தில், 1 வாரம் புதுவையில்!!!!!!

மக்களே மேலும் ஒரு முழக்கம்... 2011ல் அண்ணன் மருத்துவர் ஆட்சி அமையும் பொழுது!!!!!!! தமிழகம் மற்றும் புதுவையில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்!!...

அருமை குடி மக்களே.... உணர்ச்சி வசப்பட வேண்டாம்.... பூரண மதுவிலக்கு எனபது... அரசு வசம் உள்ள மதுக்கடைகளை பூரணமாக விளக்கி... அதாவது மூடி... நமது அணியின் நெருங்கிய உறவினர்களுக்கும் சகாக்களுக்கும் அந்த உரிமங்கள் பெருவாரியாக வழங்கப்படும்....

நமது சின்னையா தடுப்பூசி தொழிற்சாலைகளை மூடியதை போல்..... என்ன சந்தோசம் தானே இப்பொழுது......

No comments:

Post a Comment