Friday, March 6, 2009

பழம் புளித்தது இப்பொழுது.....

பழம் புளித்தது இப்பொழுது.....

ஆம் நண்பர்களே, கதையில் நரி உணர்த்திய அதே சித்தாந்தத்தை இன்று புரட்சி பல படைத்த தலைவி, மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்த, தூங்கிக் கொண்டிருந்த மக்களை, மாசற்ற மக்களை (பிள்ளைகளை) தாயன்பு கொண்ட புரட்சித்தாய் அழைக்கிறார், எழுச்சி கொள்ள அழைக்கிறார்,

ஆம் நண்பர்களே, ஈழத் தமிழனை காக்க அழைக்கிறார்…..

ஆம் நண்பர்களே, அதிகமில்லை, சில நாட்களுக்கு முன் தான் “போரில் மக்கள் இறப்பது ஒரு இயல்பான நிகழ்வு தான்” என யாருக்குமே உதித்திடாத மாபெரும் சிந்தனையை இவ்வுலகக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, தமது சிந்தனை பெட்டகத்திலிருந்து எடுத்து விளக்கிய புரட்சித்தாய் அழைக்கிறார்…

அது மட்டுமா…

“ஈழம் என்ற ஒரு நிலம் என்றுமே இருந்தது இல்லை” என்ற வரலாற்றை தமிழர்களுக்கு கற்று கொடுத்தார்… ஆகவே தமிழர்கள், இன எதிரியின், பகைவனின், நில ஆக்கிரமப்பையும், அவன் அங்கு புரியும் எண்ணிலிடங்கா அவலங்களையும் வாய்பொத்தி, அடங்கி ஏற்று கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியவர் தான் புரட்சித்தாய்…..

அது மட்டுமா… இன்னும் உள்ளன… புரட்சியின் இதிகாசங்கள்....

“அங்கே இருந்தால் புதைகுழியில் தான் போவீர்கள்.. இங்கே வந்தால் நன்மை உங்களுக்கு தான் அதிகம் எங்களுக்கு விட”... என்று கூவி கூவி கூவியதெல்லாம்...
மக்களே.. அதையா இன்னும் நீங்கள் என்ன என்று கேட்கிறீர்கள்... மறந்திருப்பீர்கள் என்று நினைத்தோம்.....

இல்லை இல்லை... அது போன மாசம்... நாங்கள் அவர்களை அழைக்கவே இல்லை... இப்பொழுது இதை சொல்கிறோம்..... முடிந்தால், அடுத்த மாசம் இதையே சொல்வோம், முடிந்தால் (சூழ்நிலைகளை பொருத்து)...

ஆகவே... புரட்சியின் படையினரே... புறப்படுவீர்.... உங்கள் தாய் அழைக்கிறார்..... இன்னுமொரு புரட்சி செய்ய .....

2 comments:

  1. AGAIN JAYALALITHA IS PROVING THAT, SHE IS STILL A GOOD ACTRESS. SHE IS THINKING THAT SHE IS THE ONLY TALENTED PERSON, OTHERS ARE FOOL. SHE REQUEST CONGRESS TO COME OUT FROM DMK ALLIANCE MEANS, FOR WHAT PURPOSE.... ADVISE THEM TO MAKE ALLIANCE WITH BJP. IT MEANS COME AND JOIN WITH ME ..ONLY. NOW CONGRESS REFUSED HER SO SHE IS TALKING LIKE THIS. THERE IS A PROVERB IN TAMIL ' KUPPURA VIZHUNDHAALUM MEESAIYIL MAN OTTA VILLAI ' LIKE THAT STORY.

    THANJAI AMMAPETTAI BALU FROM BAHRAIN.

    ReplyDelete