Saturday, March 28, 2009

கலைஞர் அவர்களே, தேர்தலுக்குப்பின்…

கலைஞர் அவர்களே, தேர்தலுக்குப்பின்…

ஆம், தேர்தலுக்குப்பின் என்ன செய்ய போகிறோம்,

வீடு இருந்தால் தான் கூரை அமைக்க முடியும், ஆட்சி இருப்பதால் தான் இந்த அளவிளாவது நம்மால் ஈழ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க முடிகிறது என்றீர்கள்…. அதனால் தான் கையாளாகாத கைக்கட்சியுடன் இன்னமும் ‘அரசியல் நிர்ப்பந்தம்’ என்ற போர்வையில், மொழி உணர்வு, இன உணர்வு, மனிதாபமானம், இன்னும் என்னவெல்லாம் உள்ளதோ, அனைத்தையும் மறந்து, மறைத்து, மீண்டும் மக்களை சந்திக்க களம் கண்டாகி விட்டது….

இது கையாளாகாத கைக்கழுவ வேண்டிய கைகளின் காலம் என்று எடுத்து கொள்ளலாமா….

சரி, இப்போது அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதை பார்போம்,

சென்ற முறை போல் கழக வேட்பாளர்கள் வெற்றி ஈட்டினால், ஈழக் கொள்கையில் தமிழர் ஆதரவு நிலை கொண்டால் மட்டுமே ஆட்சியில் பங்கேற்போம், ஆட்சிக்கும் ஆதரவு தருவோம் என்று நிர்பந்திப்பீர்களா?

எப்படியாவது, எந்த இழி நிலையையும் கையாண்டு, ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தேசிய மாக்கட்சி, அந்த குறுகிய காலத்திற்காவது நிர்பந்திக்கப்படுமா?

மாறாக, அணைத்து இழிநிலைகளையும் கடந்து கூட மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு, தமிழகத்தில் ஆட்சி பங்கீடு கேட்டால், அப்போது கழகம் என்ன செய்யப்போகிறது? இன வஞ்சகர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்க்க போகிறதா?….

தமிழன் ஈழத்தில் மாண்டால் என்ன, இங்கு தமிழகத்தில் மாண்டால் என்ன, அவனோடு சேர்ந்து நாமும் மாண்டு போவோம் என்று மயிலை மேடையில் நீங்கள் ஊகித்ததை, கையாளாகாத கைகள் ஆட்சியில் பங்கு பெற்று நடைமுறை படுத்த அனுமதிப்பீர்களா?…..

ஆவடியில், தமிழ் மண்ணில் உற்பத்தி செய்யப்பட்ட பீரங்கிகள் எதற்காக கேரளா வழியாக பயணித்து, ஈழ மண்ணில் தமிழன் இரத்தத்தை நுகர வேண்டும், பீரங்கிக்கும் தமிழ்ப்பற்றை போதிக்கிறதா தேசிய கட்சி, தமிழனக்கு இறையாண்மை கற்று கொடுப்பதைப்போல்,

எதற்காக அவ்வளவு தூரம் அவை பயணிக்க வேண்டும், இங்கேயே ஆவடியை சுற்றி, இங்குள்ள தமிழர்களின் தலையை துளைக்கட்டும், அதை கைக்கொட்டி களிக்கட்டும் கைக்கூட்டம்,

நண்பர்களே, தமிழகத்தில் தமிழராய் பிறந்து விட்ட சகோதர சகோதரிகளே, நாமும் இப்பொழுதே பழகிக்கொள்வோம், பதுங்கு குழியில் வாழ்வது எப்படி என்று, நமக்கு அதிகம் சிரமம் இருக்காது அவற்றை கற்றுக்கொள்ள, அருகிலேயே இருக்கிறான் ஈழத்தமிழன்,

கற்று கொடுப்பான் நமக்கு இலவசமாக….

No comments:

Post a Comment