Friday, January 30, 2009

செத்த பாம்பை அடிக்க வேண்டாம் நண்பர்களே

நண்பர்களே ...

நான் விளக்க விரும்பவது தேசத்தை ஆளும் பழம்பெரும் தேசிய கட்சி, 50 ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆண்டு, நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ள பாழடைந்த, பாழாகிபோன, பூசல்கள் மட்டுமே நிறைந்த,

இதற்கு மேலும் இழிவு படுத்த முடியாத ஒரு தேசிய கட்சி இருப்பது என்றால், நான் என்ன செய்வது, என்னால் அதை சொல்ல கூட முடியவில்லை, ஆகவே நண்பர்களே, நான் உங்களுக்கு சொல்லும் கருத்து, செத்த பாம்பை அடிக்க வேண்டிய நிலை இங்கே (தமிழகத்தில்) இல்லை, நாம் இப்போது நமது முழு கவனத்தையும் ஈழ விடுதலைக்கும், ஈழ சகோதர நல்வாழ்வுக்கும் ஏற்ற பணிகளில் செலுத்துவோம், சாலையில் வீசப்பட்ட செத்த பாம்பு எப்படி மிதிபட்டு நசுங்கி தானாகவே இருந்த இடம் இல்லாமல் மறைகிறதோ, அது போலவே இந்த தேசிய கட்சியும், இப்போது இருக்கும் சொற்ப ஆதரவு கூட (ஒண்டி பிழைக்க, அடுத்த கட்சியுடன் பிச்சை பெற்று, சட்டசபைக்குள் நுழைந்து இன்று ஆட்சியே இவருடயதுபோல் மெத்தனமாக திரியும் இன வஞ்சகர்கள்) இல்லாமல் தானாகவே மங்கி போவார்கள்,

ஆகவே நாம் இந்த வீணாய் போனவர்களை சீண்டாமல் இருப்பதே சாளச்சிறந்தது, தமிழகத்தில் இப்பொழுது எழுந்துள்ள இன சீற்றத்தில் இந்த தேசிய கட்சி மண்ணோடு மண்ணாகும்...

இதை கூட்டணிக்குள் கொண்டிருக்கும் மாநிலத்தை ஆளும கட்சியும் உணர வேண்டும், நிகழ்கால எழுச்சியின் தாக்கம் ஆளும் கட்சிக்கு பெரும் இழப்புகளை உண்டாக்கும் என்பதை கழகத்தலைமை உணர வேண்டும்,

நண்பர்களே, எனினும் இந்த தேசிய கட்சிக்கு நாம் பாடம் புகட்டத்தான் வேண்டும், நம் தமிழ் பிரந்தியத்தில் புதுவையில் மட்டுமே இதன் ஆளுமை இருப்பது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை தரலாம், ஆனால் இது தான் நல்ல தருணம், இந்த இன எழுச்சியில் எழும் நம் சீற்றம் புதுவையில் ஒளிரும் இந்த தேசிய கட்சியின் ஒளியை சுவடே இல்லாதவாறு அணைக்க வேண்டும்... அங்கும் கூட்டணி என்ற போர்வையில் தான் இவர்களின் தீப ஒளி அணையும் தருவாயில் உள்ளது, ஆகவே அதை நாம் முழுமையாக அணையுமாறு செய்ய வேண்டும், அதற்கான ஆயுத்த நடவடிக்கைகளை நமது பெ.தி.க தோழர்கள் கடந்த சில நாட்களாக சிறப்பாக செய்து வருகிறார்கள், அவர்களுக்கு நாம் நமது நன்றியையும் பாராட்டையும் இந்த வேளையில் மனப்பூர்வமாக தெரிவித்துகொள்வோம், மென்மேலும் அவர் பணி தொடர நாம் வாழ்த்துகளை தெரிவிப்போமாக....





2 comments: