Tuesday, February 17, 2009

புரட்சி விழித்து கொண்டது....

புரட்சி விழித்து கொண்டது....

ஆம் நண்பர்களே... திடீரென்று இன்று புரட்சி விழித்து கொண்டது... இப்பொழுதுதான் கனவு கலைந்தது போல.... சற்றும் காலம் தாழ்த்தாமல், வரும் சனியே புரட்சிஎன்றும், தூதரகத்தை இழுத்து மூடவேண்டும் என்றும், புரட்சி கர்ஜிக்கிறது, எவர்க்கும் கிடைக்காத தூதரகத்தின் சாவி இவரிடம் மட்டுமே இருப்பது போல், சனியன்று சென்று அதை தாழிடப்போகிறது புரட்சி.....

தேசிய கட்சியுடன் பேரம், நினைத்தார் போல் கைகூடவில்லை... ஆகவே தான் இந்த தீடீர் எழுச்சி.... மாதங்கள் பல கடந்தபின் எழுந்துள்ள இந்த பாசப்புரட்சி....

ஆம் நண்பர்களே, தமிழனின் நிலை இதுதான்.... அங்கு ஈழத்தில் குண்டு மழைக்கு இடையே தமிழ் அடையாளத்தை நிலைநாட்ட புரட்சி... இங்கு புரட்சிகளுக்கு இடையே தமிழனின் காலம் நகர்கிறது, ஆம் வேதனையின் விளிம்பில், சொந்தங்களின் துயரில்... ஓங்கி குரலெழுப்பி ஆர்பரிப்பதை தவிர..... இதோ இதை போல் தனக்கு தானே எழுதுவதை தவிர... எதுவும் செய்ய முடியவில்லை, தெரியவும்மில்லை....

இன வஞ்சகர்களுக்கு பாடம் புகட்ட முனைப்பட்டால் கூட எந்த கூட்டத்துக்கு பாடம் புகட்டுவது... இருக்கும் அணைத்து கூட்டத்திலும் இன வஞ்சகன் இருக்கிறான்....

நண்பர்களே... இன உறவுகளே.... இந்த இக்கட்டான சூழலில்... நாம் பாடம் புகட்ட வேண்டியது தேசிய கட்சிக்குத்தான்.... ஆட்சியை கைப்பற்ற மிக முக்கிய ஆதாரமாக இருந்த தமிழனின் அன்றைய வாக்குரிமை... அன்று வருக வருக என்று வரவேற்றது... இன்று அவன் கேட்கும் ஈழ சொந்தங்களின் அமைதிக்கு செவி மறுக்கிறது....

எனவே உறவுகளே... இப்பொழுது ஒவ்வொரு கூட்டத்திலும் இன உணர்வாளனும், இன வஞ்சகனும்... கை கோர்த்து... பிச்சை கேட்கிறான்.... வாக்கு தா என்று...... எனினும் உறவுகளே... இன உணர்வாளனாலும் அவன் வஞ்சகனோடு இருப்பதனால், அவனக்கு தான் முதலில் பாடம் புகட்ட வேண்டும் .....

ஆகவே சுயேச்சை வென்றாலும் பரவாயில்லை என... அவனாவது எண்ணிக்கையில் தனிமைபடுதப்பட்டாலும், அவனாவது தமிழனுக்காக குரல் கொடுப்பான் என எப்போதும் போல் இப்போதும் நினைப்போம்....

அவன் (சுயேச்சை) விலைபோகாதவரை......

3 comments:

  1. aduthavarhalai thittuvathe silarukku full time job.

    ReplyDelete
  2. ina drogigalai vaazhthava mudiyum...
    indru seythi paartheergala... chennai'yil oruvarku thakka mariyathai seydullanar...
    intha nigazhvu veru kaarnangalukkukaga irundalum... thavirkka mudiyathathu nigazhvugal ivai....

    ReplyDelete
  3. chennayil uyar needhimandranathil indru nadanthathu varverkathakkathu

    ReplyDelete