Friday, April 24, 2009

வன்னித்தமிழனை கொன்றொழிக்கும் தமிழனின் 40......

வன்னித்தமிழனை கொன்றொழிக்கும் தமிழனின் 40......

ஆம் 2004ல் தமிழகத்தில் சுளையாக அள்ளிய 40 தொகுதிகள் தான், மத்தியில் ஆட்சியமைக்க காரணமாக இருந்த எண்ணிக்கை வித்தியாசம், பாஜக'வுக்கும், கைகூட்டத்துக்கும்.....

தமிழன் அன்று 40க்கு 40 கொடுத்த போதே, ஆரம்பமாகியுள்ளது திட்டம்... அதன் முடிவு தான் இன்றைய வன்னி நிலை... என்ன சாதூர்யம் பார்த்தீர்களா....

ஏணியை எட்டி உதைப்பதெல்லாம் பழைய கதை... ஏணி இருந்த இடம் தெரியாமல் செய்வதே இன்றைய நிலை.....

இந்த 5 வருஷமா என்ன என்னவெல்லாம் கொடுத்துள்ளது இந்த கைகூட்ட மத்திய அரசு.... ஆயுதம், முப்படை பயிற்சி, இவையெல்லாம் போதாதென்று வட்டியில்லா கோடிகளில் பணம், (பல ஊடகங்களில் இதன் விளக்கம் வந்திருந்தாலும் சமீபத்திய குறிப்பு இதோ .... இறுதியில் இணைக்க பட்டுள்ளது)

அடப்படுபாவிகளா, இதையெல்லாம் இங்கே செய்திருந்தால், மும்பை 26/11, அஸ்ஸாம் குண்டுவெடிப்பு ... இன்னும் பல எண்ணிக்கையில் அடங்கா நிகழ்வுகளை தடுத்திருக்கலாமே... போயும் போயும் உங்க வெத்து வீரத்த ஏண்டா தமிழங்கிட்ட காட்றிங்க... அப்பொறம் எங்கிருந்து இறையாண்மை, தேசம், வெங்காயம்.... இதெல்லாம் பேசறது....

பக்கத்துக்கு மாநிலத்ள எப்போதும் போல தண்ணில'தான் பிரச்சினை... அத தான் தேசம், ஒற்றுமை சொல்லி விவசாயிகள கொல்றிங்க.... எங்க 40 தொகுதியையும் வாங்கி எங்க ஆளுங்களையே கொல்ரிங்களே, அப்பறோம் ஏன்டா தமிழ் தேசியம் பேச மாட்டாங்க.....

இவ்வளவு நடந்த பின்னும் வரும் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் கைக்கூட்டம் வெற்றி பெறுகிறதோ.... அந்த தொகுதியில் கைகூட்டத்துக்கு வாக்களித்தவர்களுக்கு கோயில் தான் கட்ட வேண்டும்......

நான் எந்த கோயில்'ன சொல்றேன்னா ........

http://www.thestatesman.net/page.arcview.php?clid=2&id=284403&usrsess=1

No comments:

Post a Comment